Farm Info

Wednesday, 29 June 2022 01:08 PM , by: R. Balakrishnan

Millet crop

சிறுதானிய தினை உற்பத்தியில் இந்தியா உலகளவில் முதலிடம் வகிக்கிறது. 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தினை சாகுபடி செய்யப்படுகிறது. குறைவான 'கிளைசிமிக் இன்டெக்ஸ்' உள்ளதால் ரத்தத்தின் சர்க்கரையின் அளவை குறைக்கும். அதிகளவில் 'டிரிப்டோபேன்' இருப்பதால் உடலில் கொழுப்பு சேர்வதை குறைக்கிறது. எலும்பு, தசைகளுக்கு வலுவளிக்கிறது. இது 3 மாத பயிர்.

தினைப் பயிர் (Millet crop)

கார்த்திகை, தை, சித்திரைப்பட்டம் ஏற்றது. வேளாண் பல்கலை வெளியிட்டுள்ள கோ 6, 7 ரகங்கள் மகசூல் தரக்கூடியது. வடிகால் வசதியுடைய மணற்பாங்கான மண்வகை சாகுபடிக்கு ஏற்றது.

உழும் போது இரண்டு சால் சட்டி கலப்பையில் குறுக்கு நெடுக்காக உழ வேண்டும். ஏக்கருக்கு 5 டன் தொழுஉரம் இட வேண்டும். ஏக்கருக்கு தேவையான 4 கிலோ விதையை 10 கிலோ மணலுடன் கலந்து விதைக்க வேண்டும். விதைத்த பின் கொக்கி கலப்பை கொண்டு மீண்டும் உழ வேண்டும்.

மண்ணிலுள்ள ஈரப்பதத்திலேயே 7ம் நாளில் பயிர் முளைக்கும். மழை இல்லாத போது ஈரப்பதத்தை பொறுத்து 15 முதல் 20 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் காட்டவேண்டும். விதைத்த 20ம் நாளில் களை எடுக்க வேண்டும். அதன்பின் பயிர் வளர்ந்து நிலத்தை மூடுவதால் களை வளராது.

களை எடுத்தபின் 20, 40, 60ம் நாட்களில் 6 லிட்டர் ஜீவாமிர்த கரைசலை 60 லிட்டர் தண்ணீரில் கலந்து வயல்முழுவதும் தெளிக்க வேண்டும். தனியாக உரமிட வேண்டாம். தினையில் பூச்சிநோய் தாக்குதல் குறைவு.

மேலும் படிக்க

மதுரையில் முருங்கை ஏற்றுமதி சிறப்பு மண்டலம்: அமைச்சர் தகவல்!

சரிந்தது பூக்கள் விலை: விஷேசங்கள் இல்லாததே காரணம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)