நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 9 October, 2021 7:40 PM IST
Thousand farm ponds

வடகிழக்கு பருவ மழையை முழுமையாக அறுவடை (Harvest) செய்யும் வகையில், கிராமங்களில், 1,000 பண்ணைக்குட்டைகள் அமைக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு, மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என, பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தி வந்தன. அதன்படி, வடகிழக்கு பருவ மழைக்காலத்தில், மழைநீரை சேகரித்து, நிலத்தடி நீரை (Ground Water) பாதுகாக்க, உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

திருப்பூர் ஒன்றியத்தில் உள்ள, 13 ஊராட்சிகளிலும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துவக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்ட, மாவட்ட கண்காணிப்பு அலுவலரான, ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் செயலர் டாக்டர் கோபாலும், மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கட்டாயம் செயல்படுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.அவ்வகையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும், நேற்று அவசர ஆலோசனை நடத்தப்பட்டது.

திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில், பி.டி.ஓ., மீனாட்சி, விஜயகுமார் ஆகியோர் தலைமையில், கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர்கள் மற்றும் செயலாளர்கள், துணை பி.டி.ஓ.,களுக்கு, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அறிவுரை வழங்கப்பட்டது.

இலக்கை எட்ட தீவிர முனைப்பு

இதுகுறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன் கூறியதாவது: தமிழக அரசு, மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மீண்டும் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது. வேலை உறுதி திட்டத்தில், ஊராட்சிகள் தோறும், மழைநீர் சேகரிப்பு (Rainwater Harvest) மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை துவங்கியுள்ளது.

1,000 பண்ணைக்குட்டைகள்

ஊராட்சிகளில் தலா, ஐந்து பண்ணைக்குட்டை, குளம், குட்டை மற்றும் பொது இடங்களில், சிறு குழிகள் அமைத்து மழைநீரை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதத்திற்குள், 265 ஊராட்சிகளில், 1,000 பண்ணைக்குட்டைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள், தங்களது நிலத்தில், ஐந்து மீட்டர் நீளம் மற்றும் அகலம், 1.50 மீட்டர் ஆழத்தில், பண்ணை குட்டை அமைக்க, ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

மழைநீரை ஒரு துளி கூட வீணாக்காமல் தேக்குவதன் மூலம், நிலத்தடி நீராதாரம் செறிவூட்டப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.ஊராட்சிகளில், தலா, ஐந்து பண்ணைக்குட்டை, குளம், குட்டை மற்றும் பொது இடங்களில், சிறுகுழிகள் அமைத்து மழைநீரைசேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கூகுள் மீட்டிங் நடத்தி ஆலோசனை

வடகிழக்கு பருவத்தில், மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என, கலெக்டர் வினீத் உத்தரவிட்டுள்ளார்.அனைத்து ஊராட்சி தலைவர்களுடன்,'கூகுள் மீட்டிங்' வாயிலாக, இதுகுறித்து நேற்று ஆலோசித்தார். கிராமங்களில், மழைநீரை முழுமையாக அறுவடை செய்ய வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க

மல்லிகை சாகுபடிக்கான சரியான நேரம் இது தான்!

மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்: வேளாண் துறை ஆய்வு

English Summary: Intensification of work to set up a thousand farm ponds to harvest rainwater!
Published on: 09 October 2021, 07:40 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now