நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 7 September, 2022 7:14 PM IST

விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, பொருளாதார ரீதியில் அவர்களுக்கு உதவும் விதமாக 3 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லாக் கடன் வழங்க மாநில அரசு முன்வந்துள்ளது. அரசின் இந்த முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு ஒருபுறம், அடித்துத் தாக்கும் கனமழை மறுபுறம் என எல்லா வகையிலும், பெரும் நிதிச்சுமையை விவசாயிகள் எதிர்கொண்டுவருகின்றனர்.

எனவே விவசாயிகளுக்கு உதவும் வகையில், 0 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்க சட்டீஸ்கர் மாநில அரசு முன்வந்துள்ளது. அதாவது இந்தக் கடன் பெறும் விவசாயிகளுக்கு வட்டி கிடையாது. இது தொடர்பாக நடைபெற்ற சட்டீஸ்கர் மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, அம்மாநில வேளாண்துறை அமைச்சர் ரவீந்திர சவுபே தெரிவித்துள்ளார்.

யாருக்குக் கிடைக்கும்

இதன்படி, ஏற்கனவே நடைமுறையில் உள்ள வேளாண் திட்டங்களில், சிறு மற்றும் விவசாயிகளுக்கு இந்தக் கடனைப் பெறத் தகுதியானவர்கள் ஆவர்.

தகுதி

குறிப்பாக கால்நடை வளர்ப்பு, மீன் பண்ணை அமைத்தல், தோட்டக்கலைப் பயிர் சாகுபடி போன்றவற்றில்,உள்ள விவசாயிகளுக்கு குறுகிய கால கடனாக இந்த 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இதற்காக, வட்டி மானியம் வழங்கப்படும் திட்டங்களில் விதிகள் மாற்றியமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வேளாண் சார்ந்த துறைகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் வகையில், நவ ராய்பூரில், 3 ஏக்கர் நிலப்பரப்பில், கிருஷி பவன் அமைக்கவும் சட்டீஸ்கர் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் படிக்க...

4 வயது குழந்தைகள் வேலைக்குத் தேவை - வித்தியாசமான விளம்பரம்!

பிள்ளையாருக்கு ரூ.316 கோடிக்கு காப்பீடு!

English Summary: Interest-free loan for farmers up to Rs. 3 lakh rupees!
Published on: 07 September 2022, 06:56 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now