Farm Info

Monday, 20 June 2022 04:48 AM , by: R. Balakrishnan

Inventing machine to remove juniper tree

மதுரை மாவட்டம் மேலுார் அரசு கல்லுாரி மாணவி திவ்யதர்ஷினி, சீமைக் கருவேல மரங்களை எளிதாக அகற்றும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார். மேலூரை சேர்ந்த செந்தில் மகளான திவ்யதர்ஷினி, பி.எஸ்சி., தாவரவியல் முதலாம் ஆண்டு படிக்கிறார். சிறு வயது முதல் பள்ளி அறிவியல் கண்காட்சிகளில் பல கண்டுபிடிப்புகள் செய்து காண்பித்து பரிசுகளை வென்றுள்ளார்.

இயந்திரம் கண்டுபிடிப்பு (Inventing the Machine)

தற்போது சீமை கருவேல மரங்களை டிராக்டரில் ஹைட்ராலிக் கருவியை கொண்டு இலகுவான முறையில் அகற்றும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார். மாணவி கூறுகையில், ''இந்த இயந்திரம் மூலம் ஒரு ஏக்கரில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அரைமணி நேரத்தில் ரூ.2 ஆயிரம் செலவில் அகற்றலாம்.

சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கு தமிழக அரசு, விவசாயிகள் கேட்டுக் கொண்டால் செயல்படுத்த தயாராக உள்ளேன். அடுத்து காஸ் சிலிண்டருடன் ஆக்சிஜனை இணைத்து எரிவாயு அடுப்பை கண்டுபிடிக்க உள்ளேன்'' என்றார்

கல்லூரி மாணவியின் இந்த கண்டுபிடிப்பு, விவசாயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் ஐயமில்லை. 

மேலும் படிக்க

இரவில் பேருந்து சேவை நிறுத்தம்: சிரமத்தில் சென்னை வாசிகள்!

தரிசு நிலத்தில் மகசூல் தரும் முந்திரி விவசாயம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)