மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 14 February, 2021 11:45 AM IST

வேளாண் பயிர் கடன் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், வாங்கியக்கடனை முன்கூட்டியே  செலுத்திய விவசாயிகள், தங்களுக்கு ஏதேனும் சலுகை கிடைக்குமா? என ஏக்கத்தில் உள்ளனர்.

கடன் வழங்கும் முறை (Lending method)

கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிர் கடன், நகை கடன் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 1 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு அதிகபட்சமாக, 50 ஆயிரம் ரூபாய் வரை பயிர் கடன் வழங்கப்படும்.

தகுந்த ஆவணங்களுடன் விவசாயிகள் விண்ணப்பித்தால், சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மாவட்ட கூட்டுறவு சங்க அதிகாரிகளுக்கு அனுப்பப்படும்.

வங்கிக்கணக்கில் வரவு (Credit to bank account)

அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்து கையெழுத்திட்டவுடன், மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து, விவசாயிகளின் வங்கி கணக்குக்கு பணம் வந்துவிடும்.

அதிகாரிகள் கோரிக்கை (request of the authorities)

பயிர் கடனை, ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். இன்னும் சில வாரங்களில் தேர்தல் தேதி அறிவித்து விட்டால், முடிந்த கடனை புதுப்பிக்க முடியாது என்பதால், முன்கூட்டியே புதுப்பிக்கும்படி சங்க அதிகாரிகள், விவசாயிகளிடம் கேட்டுக் கொண்டனர்.

வேறு இடங்களில் கடன்  (Credit elsewhere)

இதன் காரணமாக ஆயிரக்கணக்கான விவசாயிகள், வேறு இடங்களில் கடன் பெற்று, பயிர் கடனை திருப்பி செலுத்தியுள்ளனர். இதில், பெரும்பாலானவர்களுக்கு மீண்டும் கடன் வழங்க, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

விவசாயிகள் ஏக்கம் (Farmers nostalgia)

இந்நிலையில், பயிர் கடனை ரத்து செய்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 5ம் தேதி, உத்தரவிட்டார். இதனால், முன்கூட்டியே பயிர் கடனை புதுப்பித்த விவசாயிகள், தள்ளுபடி கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில், கூட்டுறவு வங்கிகளை விவசாயிகள் முற்றுகையிட்டு வருகின்றனர்.

விவசாய சங்க நிர்வாகிகள் சிலர் கூறுகையில், தள்ளுபடி அறிவிப்பு வந்ததால், கடனை முன்கூட்டியே செலுத்தியவர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். எனவே, முதல்வர் குறிப்பிட்ட நாட்களில் திருப்பி செலுத்திய விவசாயிகளையும் பயனாளர்களாக அறிவித்து, அவர்களுடைய பணத்தை திருப்பி தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க...

காங்கயத்தில் நாளை கால்நடைத் திருவிழா!

பம்ப் செட்டுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும்- முதல்வர் அறிவிப்பு!

மெட்ரோ ரயிலில் ஓசியில் பயணம் செய்ய விருப்பமா? இன்று மட்டும் வாய்ப்பு!

English Summary: Is there a discount for those who have repaid their crop loan? Farmers nostalgic!
Published on: 14 February 2021, 11:33 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now