மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 September, 2021 7:47 AM IST
Credit : Business Line

திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் எனத் தெரிகிறது.

தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகியவை பணம் மற்றும் நகைக்கு மிகவும் பாதுகாப்பான சேவையை அளித்து வருகின்றன.
அதுமட்டுமின்றி குறைந்த வட்டியில் கடன் வழங்குவதால் கிராமப்புற, நகர்ப்புற மக்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்ளிட்டோர் பெரிய அளவில் பயனடைந்து வருகின்றனர்.

தேர்தல் வாக்குறுதி (Election promise)

முன்னதாக நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இது கடன் வாங்கிய மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று முதல்முறையாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

பதவி ஏற்றது முதல் தேர்தல் வாக்குறுதிகளைப் படிபடியாக நிறைவேற்றிரும் திமுக அரசு, கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வாங்கியவர்கள் தங்களது கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை எப்போது வெளியிடுமோ என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

விவரங்கள் சேகரிப்பு (Collection of details)

அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், கூட்டுறவு வங்கிகளில் வாங்கப்பட்ட கடன் தள்ளுபடி குறித்து இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களில் முதல்வர் அறிவிப்பார் என்று கூறியிருந்தார்.
இதனிடையே கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்றவர்களின் விவரங்களை கூட்டுறவுத்துறை சேகரித்துள்ளது. அதில் 61 லட்சம் பேர் சுமார் 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் (Local body elections)

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.எனவே உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டால், அது தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று திமுக தரப்பில் நம்பப்படுகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர் (Assembly Session)


தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 13ம் தேதியுடன் நிறைவடைகிறது.எனவே செப்டம்பர் 13ம் தேதியான திங்கட்கிழமை, வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, பொதுத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை, மாநில சட்டசபை, ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித் துறை, மனிதவள மேலாண்மைத் துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதமும், துறை சார்ந்த அறிவிப்புகளும் வெளியாகவுள்ளன.

இதில் 110 விதியின் கீழ் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுவார் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க...

நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு 15ம் தேதி வரை கனமழை எச்சரிக்கை!

வருமான வரி தாக்கல் செய்வதில் தொடரும் சிக்கல்: காலக்கெடு நீட்டிப்பு!

English Summary: Jewelry Discount - Opportunity to announce today!
Published on: 13 September 2021, 07:39 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now