சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 19 January, 2022 11:54 AM IST
Drones in Agri work
Drones in Agri work

ஆனைமலை தாலுகா பகுதியில், ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்க, நெல் வயலில் 'ட்ரோன்' பயன்படுத்தி களைக்கொல்லி தெளிக்கப்பட்டது. நாடு முழுவதிலும் விவசாயத்துக்கு உதவும் வகையில், பல்வேறு புதிய வேளாண் கருவிகள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வேளாண் பொறியியல் துறை சார்பிலும், பல நவீன கருவிகள் வாங்கப்பட்டு, விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வழங்கப்படுகின்றன.
ஆனைமலை விவசாயிகள், நவீன தொழில்நுட்பம் கொண்ட இயந்திரம் பயன்படுத்தி நடவு செய்து, களைகள் அகற்றி, அறுவடை பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இதுவரை யாரும் களைக்கொல்லி தெளிக்க, 'ட்ரோன்' பயன்படுத்தியது இல்லை.

ட்ரோன் பயன்பாடு (Drones Usage)

ஆனைமலை தாலுகாவில் முதல்முறையாக, விவசாயி பட்டீஸ்வரன் வயலில், 'ட்ரோன்' வாயிலாக களைக்கொல்லி தெளிக்கப்பட்டது. விவசாயி பட்டீஸ்வரன் கூறியதாவது:
நெல் நடவு செய்து, 20வது நாளில் களைக்கொல்லி தெளிக்க வேண்டும். தற்போது, களைக்கொல்லி தெளிக்க அதிகப்படியான மருந்து, ஆட்கள் தேவைப்படுகின்றனர். மேலும், ஆட்கள் பற்றாக்குறையால் விவசாய பணிகள் பாதிக்கப்படுகிறது. வேளாண்துறையினர் அறிவுரைப்படி 'ட்ரோன்' பயன்படுத்தி களைக்கொல்லி தெளித்தேன்.

சாதாரணமாக ஒரு ஏக்கருக்கு களைக்கொல்லி தெளிக்க, 250 மி.லி., மருந்து தேவைப்படும், களைக்கொல்லி தெளிப்பான் வாயிலாக ஒருவர், ஐந்து முறை தெளிக்க வேண்டும். தெளிப்பானில் இரண்டு பேர் தண்ணீர் நிரப்ப வேண்டும். ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக, 3,500 முதல் நான்காயிரம் ரூபாய் வரையில் செலவாகிறது.

களைக்கொல்லி

'ட்ரோன்' வாயிலாக களைக்கொல்லி தெளித்தால், ஒரு ஏக்கருக்கு, 125 மி.லி., களைக்கொல்லி மட்டுமே தேவைப்படுகிறது. 'ட்ரோன்'க்கு, 500 ரூபாய் வாடகை மற்றும் ஒரு ஆளுக்கு கூலி கொடுத்தால் போதும்.

'ட்ரோன்' வாயிலாக தெளித்ததில், 60 சதவீதம் பணம் மற்றும் நேரம் மிச்சமாகியுள்ளது. களைக்கொல்லி வீணாகாமல், பரவலாக தெளிக்கப்பட்டு நல்ல பலன் கிடைத்துள்ளது. விரைவில் வேளாண் பொறியில் துறையினர் 'ட்ரோன்'களை விலைக்கு வாங்கி விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வழங்க வேண்டும்.

மேலும் படிக்க

உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் நடத்தி சாதனை படைத்த பெண் விவசாயிகள்!

விதை உளுந்து வழங்குவதில் தாமதம்: விவசாயிகள் அலைகழிப்பு!

English Summary: Lack of manpower: Drones in agricultural work!
Published on: 19 January 2022, 11:16 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now