மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 30 August, 2021 7:50 AM IST
Credit : Dinamalar

நீலகிரி, ஈரோடு மாவட்ட எல்லையில் உள்ள தெங்குமரஹடாவில் உள்ள விவசாயிகள், 60 கிலோ மீட்டர் தூரம் பரிசலில் பயணித்து, அவிநாசிக்கு வந்து, தங்களின் விளைபொருளை ஏலத்தின் மூலம் விற்பனை செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

தெங்குமரஹடா

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி தாலுகாவுக்குட்டப்பட்ட கடைகோடி கிராமம் தான் தெங்குமரஹடா.

நீலகிரி, ஈரோடு மாவட்ட எல்லையில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் இந்தக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் அதிகளவில் நிலக்கடலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாகுபடி பருவம் (Cultivation season)

ஆண்டுதோறும், ஜூலை, ஆக., மாதம், அங்கு நிலக்கடலை அறுவடை செய்யப்படும். அவற்றை, சத்தியமங்கலம் வழியாக, அவிநாசி அருகே, சேவூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட ஏல மையத்தில் நடக்கும் ஏலத்தின் மூலம் விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர் விவசாயிகள்.

இதுகுறித்து விவசாயி சுரேஷ்குமார் கூறியதாவது:

கடந்த, 15 ஆண்டுகளுக்கும் மேலாகவே, இந்த ஏல மையத்தில் தான், நிலக்கடலை விற்பனை செய்கிறோம். கடலை எண்ணெய், கடலை மிட்டாய் தயாரிப்புக்கு எங்களின் நிலக்கடலையை வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.

மாயாற்றைக் கடப்பது கட்டாயம் (It is mandatory to cross the river)

எங்கள் ஊரில் உள்ள தெங்குமரஹடா, புதுக்காடு, சித்திரபட்டி, அல்லிமாயாறு, கல்லம்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள மக்கள் மாயாற்றை கடந்து தான், நிலக்கடலை எடுத்து வர வேண்டியுள்ளது.

தண்ணீர் அதிகமாக ஓடும் போது, பரிசல் மூலமாகவோ, தண்ணீர் குறைவாக இருக்கும் போது, சரக்கு வாகனத்தின் உதவியுடன், ஆற்றைக்கடந்து, நிலக்கடலை எடுத்து வருகிறோம். இதனால், போக்குவரத்து செலவு அதிகம்.
ஏல மையத்தில் ஓரிரு நாள் தங்கியிருந்து, நிலக்கடலையை விற்பனை செய்துவிட்டுச் செல்வோம். இந்த சிரமம் காரணமாக, நிலக்கடலை விவசாயத்தைப் பலரும் கைவிட்டனர்.

இறங்குமுகத்தில் சாகுபடி (Cultivation on the descent)

100 ஏக்கர் வரை சாகுபடி நடந்த நிலையில், தற்போது, 15 ஏக்கருக்கும் குறைவாகத்தான் சாகுபடி செய்யப்படுகிறது.

பல விவசாயிகள் வாழை, மஞ்சள் சாகுபடிக்கு  மாறிவிட்டனர். விவசாயிகள் படும் சிரமத்தால், அவர்களது பிள்ளைகள் வேறு தொழிலை நாடிச் செல்கின்றனர்.

வாழ்வாதாரம் செழிக்கும் (Livelihood will prosper)

மாயாற்றின் குறுக்கே பாலம் அமைத்தால் மட்டுமே, விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள, குடும்பங்களின் வாழ்வாதாரம் செழிக்கும். ஒவ்வொரு முறை தேர்தலின் போதும், பாலம் அமைத்துத் தருவதாக அரசியல் கட்சியினர் வாக்குறுதி அளிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

தென்னையைத் தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள்: கட்டுப்படுத்த ஆலோசனை!

திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல்: வேளாண் அதிகாரி விளக்கம்!

English Summary: Many miles of travel: Farmers selling produce!
Published on: 30 August 2021, 12:19 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now