Farm Info

Monday, 29 August 2022 03:57 PM , by: Deiva Bindhiya

Method of preparation of poisonous food to control rats in the field

எலியை கட்டுப்படுத்த விஷ உணவு உருண்டைகள் செய்யும் சரியான வழி முறையை வெளியிட்டுள்ளது, வேளாண்மை-உழவர் நலத்துறை. இதில் கொடுக்கப்பட்ட வழி முறையை பின்பற்றி நிச்சயம் எலியை கட்டுப்படுத்த முடியும்.

தேவையானவை:

அரிசி குருனை 400 கிராம்
மாவு 400 கிராம்
நல்லெண்ணெய் 100 மி.லி
புரோமோடைலான் (அல்லது) ஜிங்க்பாஸ்பைட் 100 கிராம்

 

இப்பொருட்களை கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை பயன்படுத்தி விஷ உணவு உருண்டைகளை தயாரித்து வயல்களில் பயன்படுத்துங்கள்.

வழிமுறை:

மேற்காணும் பொருட்களை ஒன்றாக கலந்து சிறு சிறு உருண்டைகளாக்க வேண்டும். இச்சிறு உருண்டைகளை வயலில் உள்ள துளைகளில் வைக்க வேண்டும். சிறந்த பயனை தர நஞ்சு கலக்காத உருண்டைகளை இரண்டு நாட்களுக்கு ஆங்காங்கே வைக்க வேண்டும். பின்பு நஞ்சு உருண்டைகளை வைத்தால் எலிகள் அவற்றை தின்று இறந்துவிடும்.

மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள வேளாண் விரிவாக்க மையங்களை அணுகுங்கள்.

மேலும் படிக்க:

வேளாண் தரிசு நிலங்களில் முட்புதர்களை அகற்ற அரசு 50% மானியம்

தமிழகம்: SC தடையை மீறி அதிகரிக்கும் ஆன்லைன் பட்டாசு விற்பனை விளம்பரம்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)