Farm Info

Wednesday, 13 October 2021 08:02 PM , by: R. Balakrishnan

Microbial fertilizers

நுண்ணுயிர் உரங்கள் (Microbial fertilizers) பயிர்களுக்கு தொடர்ந்து சத்துக்களை உற்பத்தி செய்து கொடுப்பவை. நுண்ணுயிர் உரமான அசோஸ்பைரில்லம் தழைச்சத்தை நிலைப்படுத்தும். இதன் மூலம் ஏக்கருக்கு 25 கிலோ தழைச்சத்து கிடைக்கிறது.

மண்ணில் உள்ள கரையாத மணிச்சத்தை பாஸ்போபாக்டீரியா நுண்ணுயிர் கரைத்து பயிர்களுக்கு தருகிறது. பயிர்களின் வளர்ச்சியை அதிகரிப்பதோடு மண்வளம், சுற்றுப்புற சூழ்நிலையும் பாதுகாக்கப்படுகிறது.

நுண்ணுயிர் உரங்கள்

25 கிலோ மட்கிய தொழு உரம் அல்லது 25 கிலோ மணலுடன் தலா 2 கிலோ அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா கலந்து நடவிற்கு முன்பாக சீராக துாவ வேண்டும். நெல் (Paddy) விதைத்த 3 - 5 நாட்களுக்குள் எக்டேருக்கு 250 கிலோ அசோலாவை பரவலாக துாவி வளர விட வேண்டும். அசோலா வளர்ச்சியடைந்த நிலையில் நெல்லுக்கு களையெடுக்கும் போது ரோட்டரி களை கருவி அல்லது காலால் மிதித்து மண்ணில் அமிழ்த்த வேண்டும்.

Also Read | மழைநீரை அறுவடை செய்ய ஆயிரம் பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணிகள் தீவிரம்!

உரங்கள் விற்பனைக்கு

இந்த அசோலா 10 நாட்களுக்குள் மட்கி நெற்பயிருக்கு தழைச்சத்து கிடைக்க உதவுகிறது. இதன் மூலம் எக்டேருக்கு 30 - 40 கிலோ தழைச்சத்து கிடைக்கும். மதுரை ஒத்தகடை வேளாண்மை கல்லுாரி நுண்ணுயிரியல் துறையில் நுண்ணுயிர் உரங்கள் விற்பனைக்கு (Sales) உள்ளன. தேவைப்படும் விவசாயிகள் பெறலாம்.

-கிருஷ்ணகுமார்
உதவி பேராசிரியர்
ஹேமலதா
ஒருங்கிணைப்பாளர் வேளாண்மை அறிவியல் நிலையம்,
மதுரை
98652 87851

மேலும் படிக்க

நெற்பயிரில் வளர்ச்சியை அதிகப்படுத்தி களைகளை கட்டுப்படுத்தும் அசோலா!

மல்லிகை சாகுபடிக்கான சரியான நேரம் இது தான்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)