Farm Info

Saturday, 11 June 2022 11:38 AM , by: Elavarse Sivakumar

சம்பா பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

சம்பா பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) உயர்த்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2022-23ஆம் சந்தை ஆண்டுக்கு சம்பா பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரைவை ஒப்புதல் கொடுத்துள்ளது.

MSP

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக எள்ளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு 523 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்தபடியாக பாசிப்பருப்புக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு 480 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து சூரியகாந்தி விதைகளுக்கு குவிண்டாலுக்கு 385 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

நெல்லுக்கு

பொது ரக நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு 100 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 2040 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 'A' ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு 2060 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பருத்திக்கான (Medium) குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு 6080 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. நீள பருத்திக்கு (Long) குவிண்டாலுக்கு 6380 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி

நிலக்கடலைக்கு குவிண்டாலுக்கு 5850 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க...

நித்யானந்தா ஜீவசமாதியா? சிலைகளுக்குப் பூஜையால் சர்ச்சை!

விவசாயிகளுக்கு 60% மானியத்தில் மதிப்புக் கூட்டுப்பொருட்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)