நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 1 January, 2022 5:32 PM IST
Ministry of Agriculture announces 22% increase in mustard sowing in Rabi crops

ஆங்கிலத்தில் ராபிசீட் எனப்படும் கடுகு விதை பயிர்கள், கோதுமை பயிர் சாகுபடியை விட, 22.46 சதவீதம் அதிகமாக இருந்து அதாவது 88.54 லட்சம் ஹெக்டேர் பரபளவில் பயிரிடப்பட்டதாக, விவசாய அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. முக்கிய குறுவை பயிரான கோதுமை வெள்ளிக்கிழமை நிலவரப்படி 325.88 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது, இது முந்தைய ஆண்டு 329.11 லட்சம் ஹெக்டேராக இருந்தது குறிப்பிடதக்கது. கோதுமை போன்ற ராபி பயிர்களின் விதைப்பு அக்டோபரில் தொடங்கி ஏப்ரல் முதல் அறுவடைக்கு செய்யப்படும். தரவுகளின்படி, எண்ணெய் வித்துக்கள் பயிரிடப்படும் மொத்த பரப்பளவு 2021 டிசம்பர் 31ஆம் தேதியின்படி 97.07 லட்சம் ஹெக்டேராக அதிகரித்திருப்பது குறிப்பிடதக்கது.

எண்ணெய் விதைகள் மத்தியில், ரேப்சீடு மற்றும் கடுகு விதை, கடந்த மதிப்பாய்வின் படி 72.30 லட்சம் ஹெக்டேர் என குறிப்பிடப்பட்ட நிலையில், தற்போது 88.54 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரடப்பட்டது குறிப்பிடதக்கது.

நிலக்கடலை 3.64 லட்சம் ஹெக்டேராகவும், ஆளி விதை 2.57 லட்சம் ஹெக்டேராகவும், சூரியகாந்தி 1.01 லட்சம் ஹெக்டேராகவும், குங்குமப்பூ 0.68 லட்சம் ஹெக்டேராகவும், எள் 0.30 லட்சம் ஹெக்டேராகவும், மற்ற எண்ணெய் வித்துக்கள் 0.33 லட்சம் ஹெக்டேராகவும் பதிவாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

கடுகு விதையின் சாகுபடி பரப்பளவு அதிகரித்திருப்பது, இறக்குமதியை நம்பி இருக்கும் உள்நாட்டுத் தேவையில், 60 சதவீதத்தை பூர்த்தி செய்து, உலக விலை உயர்வு சூழ்நிலையில் சில்லறை விலையை கட்டுக்குள் வைத்திருக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் ஒரு நாட்டுக்கு, சாதகமான அறிகுறியாகும்.

மற்ற முக்கிய குறுவை பயிர்களைப் பொறுத்தவரை, அதாவது பருப்பு வகைகளில் விதைக்கப்பட்ட பரப்பளவு அதிகரிப்பு சற்று குறைவாகவே உள்ளது. டிசம்பர் 31, 2021-இன் படி 152.62 லட்சம் ஹெக்டேராக இருந்தது, தற்போது 154.04 ஹெக்டேராக உள்ளது.

குறுவை பருவத்தின் முக்கிய பருப்பு வகைகள், 105.68 லட்சம் ஹெக்டேரில் இருந்து 107.69 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டது.

நடப்பு குறுவை பருவம் 2021-22 பயிர் ஆண்டு (ஜூலை-ஜூன்). சாதாரண பருப்பு வகைகள், 16.76 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு அதிகமாகவும், வயல் பருப்பு வகைகள் 9.61 லட்சம் ஹெக்டேராகவும், குல்தி 3.34 லட்சம் ஹெக்டேராகவும், உளுந்து 5.66 லட்சம் ஹெக்டேராகவும், உளுந்து 2.29 லட்சம் ஹெக்டேராகவும், லேதிரஸ் இதுவரை 3.32 லட்சம் ஹெக்டேரிலும் விதைக்கப்பட்டுள்ளது.

மொத்த பரப்பளவு 46.19 லட்சம் ஹெக்டேரில் இருந்து 45.05 லட்சம் ஹெக்டேராகக் குறைந்ததால், கரடுமுரடான மற்றும் ஊட்டச்சத்து தானியங்களின் கீழ் கவரேஜ் குறைவாக இருக்கிறது.

இந்த குறுவை பருவத்தில் 26.05 லட்சம் ஹெக்டேரில் இருந்து இதுவரை 23.17 லட்சம் ஹெக்டேரில் ஜவ்வரிசி விதைப்பு பின்தங்கியுள்ளது.

அனைத்து குறுவை பயிர்களின் மொத்த பரப்பளவு 2021-22  குறுவை பருவத்தில் 625.04 லட்சம் ஹெக்டேரில் இருந்து 634.68 லட்சம் ஹெக்டேராக உயர்ந்திருப்பதாக தரவுகள்  காட்டுகிறது.

மேலும் படிக்க:

சமையல் எண்ணெய் விலை: முதல் முறையாக வீழ்ச்சி, காரணம் என்ன?

1 முதல் 8ம் வகுப்பு வரை - நேரடி வகுப்புக்குத் தடை!

English Summary: Ministry of Agriculture announces 22% increase in mustard sowing in Rabi crops
Published on: 01 January 2022, 05:32 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now