மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 17 December, 2020 2:18 PM IST
Credit : Pasumai Vikatan

நவீன தொழில்நுட்பத்தில் வளர்க்கப்படும் இன்டோர் காளான் (Mushroom) பண்ணையிலிருந்து வெளியேறும் நீரைக் கொண்டு அசோலா வளர்த்து அதிலிருந்து வெளியேற்றப்படும் நீரைக் கொண்டு கீரை மற்றும் கற்றாழை வளர்க்கும் புதிய தொழில்நுட்பத்தில் தண்ணீரை சிக்கனப்படுத்தலாம்.

காளான் வளர்ப்பில் அசோலா:

காளான் வளர்க்கும் போது வைக்கோல் ஈரப்பதத்தால் (Moisture) வளருமே தவிர அது தண்ணீரை உறிஞ்சாது. மழைக்காலத்தில் குடிலில் தினமும் ஒரு முறையும் வெயில் காலத்தில் ஒரு நாளைக்கு மூன்று முறையும் தண்ணீர் தெளித்து காளான் (Mushroom) வளர்வதற்கான ஈரப்பதத்தை பாதுகாப்போம். அந்த தண்ணீர் கீழே விழுந்து வழியும் போது அதை ஒரு குழாய் மூலம் சேகரித்து பக்கத்தில் தொட்டி அமைத்து அந்த தண்ணீரில் அசோலா வளர்க்கலாம்.

தண்ணீர் சிக்கனம்:

அசோலா வளர்ப்பிற்கு சிமென்ட் தொட்டியில் மாட்டுச்சாணம் (Cow dung) சூப்பர் பாஸ்பேட்டை 3-க்கு 1 என்ற அளவில் சேர்க்க வேண்டும். ஒரு கிலோ அசோலா தயாராவதற்கு 109.54 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதிலிருந்து வெளியேறும் தண்ணீர் கீரை மற்றும் கற்றாழை செடி வளர்க்க பயன்படுத்தலாம். ஒரு கிலோ கீரை உற்பத்தி (Production) செய்வதற்கு 234.29 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. மொத்தமாக ஒரு கிலோ காளான், ஒரு கிலோ அசோலா, ஒரு கிலோ கற்றாழை மற்றும் ஒரு கிலோ கீரை தயாரிப்பதற்கு 2,286.9 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.
காளானுக்கு தெளிக்கப்படும் சாதாரண தண்ணீர் அசோலா வளர்ப்பின் போது ஊட்டச்சத்து நிறைந்ததாக மாறுகிறது. இது காற்றிலுள்ள நைட்ரஜன் (Niyrogen), பாஸ்பரஸ், பொட்டாஷ் சத்தை தண்ணீரில் நிலை நிறுத்துகிறது. உரச்செறிவூட்டப்பட்ட தண்ணீராகிறது. அசோலா உற்பத்தி குறையும் போது அந்தத் தண்ணீரை எடுத்து கீரை வளர்க்க பயன்படுத்தலாம்.

சுழற்சி முறை:

தண்ணீரை சசிக்கனப்படுத்தி பயன்படுத்துவதால், 10 - 12 சதவீத வளர்ச்சி அதிகரிக்கிறது. கீரை மட்டுமல்ல காய்கறி உற்பத்திக்கும் இந்த தண்ணீரை பயன்படுத்தலாம். காளான், அசோலா, கீரை அல்லது காய்கறி உற்பத்திக்கு ஒரு குறிப்பிட்ட தண்ணீரைக் கொண்டு சுழற்சி (Rotational) முறையில் பயன்படுத்தி தண்ணீரை சிக்கனப்படுத்தி சாதிக்கலாம்.

மேலும் தகவலுக்கு

ராஜேந்திரன்
ஒருங்கிணைப்பாளர்,
ரூரல் பயோடெக்னாலஜி யூனிட் சரஸ்வதி நாராயணன் கல்லுாரி
மதுரை
94439 98480.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

மியாவாக்கி முறையில் 70 ஆயிரம் மரங்களை வளர்த்து சாதனை படைத்த இளம் தொழிலதிபர்!

பயிர் பாதிப்பு குறித்து இரு நாட்களில் அரசிடம் அறிக்கை அளிக்கப்படும்! வேளாண் துறை தகவல்!

English Summary: Modern technology used for mushroom supernatant, azolla and greens!
Published on: 17 December 2020, 02:18 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now