Farm Info

Monday, 23 May 2022 05:29 PM , by: Deiva Bindhiya

More loans will be provided by co-operative societies : CM guarantees!

கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிக பயிர்கடன்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதையும், எவ்வாறு கடனுதவி வழங்கப்படும் என்பதை குறித்து, இந்த பதிவில் பார்க்கலாம்.

"கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை" சென்னை தலைமைச் செயலகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று தொடங்கி வைத்தார். மேலும் வேளாண்துறை சார்பில் ரூ. 227 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும், அவர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக உழைத்தவர் கருணாநிதி எனக் குறிப்பிட்டார். கருணாநிதியின் அனைத்து கிராம வளர்ச்சித் திட்டம், தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் செயல்படுத்தப்படும்.

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறந்து வைக்க உள்ளதையும், அவர் குறிப்பிட்டார். வேளாண்மைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து விவசாயிகளை அரசு பெருமைப்படுத்த, முழு முயற்சிகளையும் எடுத்துவருவதாக, அவர் கூறினார். விவசாயிகளின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை மாநில அரசு செயல்படுத்து வருவதையும், அவர் சுட்டிக்காட்டினார். கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிக பயிர் கடன்கள் வழங்கப்படும் எனவும், மேலும் கிராமங்கள் தன்னிறைவு பெறும், நகரங்களை நோக்கி நகர்வது குறையும் எனவும் தெரிவித்தார்.

விவசாயிகள் நலனுக்காக 7 தொலைநோக்கு திட்டங்களை உருவாக்கி உள்ளோம். 5 ஆண்டுகளில் 12,525 கிராம ஊராட்சிகளில் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும், அவர் தெரிவித்தார். கிராமங்களில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு தயார் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இதுதவிர சாகுபடியை 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்த திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார். கருணாநிதியின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தால் 9 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க:

கிசான் ரத் செயலி: விளைப்பொருட்களை கொண்டு செல்ல உதவும்

விவசாய கடன் வழங்கும் இந்திய வங்கிகள் - ஓர் பார்வை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)