வருடத்திற்கு 4000 குவிண்டால்- உருளை சாகுபடியில் அசத்தும் உ.பி. விவசாயி ! அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 9 September, 2024 9:57 AM IST
லாபம் தரும் வேளாண் தொழில்கள்

எளிமையான வேளாண் தொழில் தொடங்கவேண்டும் என்றும் நினைத்துக் கொண்டிருப்பவரா நீங்கள், சிறு முதலீட்டில் நல்ல லாபம் தரும் சிறந்த 10 வேளாண் தொழில்களின் பட்டியல் இதோ உங்களுக்காக!

நம் நாட்டில் எத்தனையே முன்னேற்றங்கள் வந்தாலும் இந்தியாவின் முதுகெலும்பு என்று சொல்லப்படுவது விவசாயம் தான். இன்றும் அத்தனை கோடி மக்கள் உண்ணும் உணவை விளைவிப்பது விவசாயம் மட்டுமே. தற்போதைய நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் இளம் தலைமுறையின் ஈடுபாடு காரணமாக விவசாயமும் அபரிவிதமாக வளர்ச்சிகளை கண்டுவருகிறது. எனவே தற்போதைய இளம் தலைமுறையினர் வேளாண் சார்ந்த தொழில்களின் ஈடுபட விறும்புகின்றனர்.

அப்படி வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபடவேண்டும் என்றும் நினைத்துக்கொண்டிருப்பவராக நீங்கள் இருந்தல், இதோ உங்களுக்காக அதிக லாபம் தரும் சிறந்த 10 வேளாண் தொழில்களின் பட்டியல் வழங்குகிறோம்.

இயற்கை விவசாயம் (Organic Farming)

நுகர்வோர் மத்தியில் அதிகரித்து வரும் சுகாதார விழிப்புணர்வு காரணமாக தற்போது பலர் இயற்கை விவசாயம் பக்கம் திரும்பி வருகின்றனர். மேலும் இந்த இயற்கை விவசாயம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மாறி வரும் தொழில்நுட்ட வளர்ச்சி காரணமக பலரது உணவு முறைகளும் மாறிவிட்டன. இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் தற்போது விவாத பொருளாக மாறி உள்ளது.
செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைத் தவிர்ப்பதன் மூலம், இயற்கை விவசாயம் மூலம் ஆரோக்கியமான விளைச்சைலை பெற முடியும். இயற்கை விவசாயத்தை மேற்கொள்வதன் மூலம் நல்ல லாபம் பெற முடியும்.

முக்கிய நன்மைகள்:

அதிக சந்தை விலைகள்
ஆரோக்கியமான மண் மற்றும் உற்பத்தி
வளர்ந்து வரும் நுகர்வோர் தேவை

பால் பண்ணை (Dairy Farming)

பால் பண்ணை அமைப்பது, இந்தியாவின் பாரம்பரிய மற்றும் லாபகரமான விவசாய முறைகளில் ஒன்றாகும். பாலாடைக்கட்டி, வெண்ணெய் மற்றும் நெய் போன்ற பால் பொருட்களுக்கான நிலையான தேவை மக்கள் மத்தியில் என்றும் உள்ளது. பால் பண்ணை ஒரு நிலையான வருமானத்தை வழங்குகிறது. கூடுதலாக, மாட்டு சாணம் போன்ற துணை தயாரிப்புகளையும் உரமாக அல்லது உயிர்வாயு உற்பத்திக்காகப் பயன்படுத்தலாம், இதுவும் லாபத்தை அதிகரிக்கும்.

முக்கிய நன்மைகள்:

பால் பொருட்கள் தேவை நிரந்தரமானது.
துணை தயாரிப்புகள் மூலம் பல வருமானம் ஈட்டலாம்
அரசாங்க ஆதரவு மற்றும் மானியங்கள் கிடைக்கின்றன.

கோழி வளர்ப்பு (Poultry Farming)

கோழி வளர்ப்பு, முட்டை மற்றும் பிராய்லர் கோழிகள் வளர்ப்பு துணை விவசாயத் தொழிலில் முதன்மையாக உள்ளது. விவசாயத் தொழில் நுட்பங்கள் மற்றும் தீவன மேலாண்மையில் ஏற்பட்ட மாற்றங்களுடன் கோழி வளர்ப்பு மிகவும் லாபகரமாக மாறியுள்ளது.

முக்கிய நன்மைகள்:

கோழி இறைச்சியை மக்கள் அதிகம் விரும்புகின்றனர்.
முதலீட்டில் விரைவான வருமானம்

ஆடு வளர்ப்பு (Goat Farming)

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைப்பதால் ஆடு வளர்ப்பு பிரபலமடைந்து வருகிறது. ஆடுகள் பல்வேறு தட்பவெப்ப நிலைகளில் செழித்து வளரக்கூடிய விலங்குகள். மற்ற கால்நடைகளுடன் ஒப்பிடும்போது குறைந்த அளவே பராமரிப்பு தேவைப்படுகிறது. ஆட்டு இறைச்சி மற்றும் பாலுக்கான தேவை தொடர்ந்து அதிகமாக உள்ளது, இதுவும் ஒரு வெற்றிகரமான மற்றும் இலாபகரமான தொழிலாகும்

முக்கிய நன்மைகள்:

குறைந்த ஆரம்ப முதலீடு
ஆட்டு இறைச்சி மற்றும் பால் அதிக தேவை
குறைந்த பராமரிப்பு தேவைகள் கொண்ட விலங்குகள்

தேனீ வளர்ப்பு (Beekeeping)

தேன், தேன் மெழுகு மற்றும் பிற தேனீ தயாரிப்புகளுக்கு உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் நல்ல சந்தை மதிப்பு உள்ளது. தேனீ வளர்ப்பு மகரந்தச் சேர்க்கைக்கு பங்களிக்கிறது, பயிர் விளைச்சலை மேம்படுத்துகிறது. சரியான நிர்வாகத்துடன், தேனீ வளர்ப்பு விவசாயிகளுக்கு லாபகரமான பக்க தொழிலாக இருக்கும்.

முக்கிய நன்மைகள்:

தேன் மற்றும் தேன் மெழுகுக்கு அதிக தேவை
மகரந்தச் சேர்க்கை மற்றும் பயிர் விளைச்சலை அதிகரிக்கிறது
குறைந்த பராமரிப்பு மற்றும் இடத் தேவைகள்

காளான் வளர்ப்பு (Mushroom Farming)

குறைந்த நில வளம் உள்ளவர்களுக்கு காளான் வளர்ப்பு ஒரு சிறந்த வழி. காளான்கள், குறிப்பாக சிப்பி மற்றும் பட்டன் காளான்கள், அவற்றின் ஊட்டச்சத்து நன்மைகள் காரணமாக சந்தையில் அதிக தேவை உள்ளது. சாகுபடி செயல்முறை ஒப்பீட்டளவில் எளிமையானது மற்றும் வீட்டிற்குள் செய்யப்படலாம், இது நகர்ப்புற மற்றும் புறநகர் விவசாயிகளுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது.

முக்கிய நன்மைகள்:

அதிக ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் தேவை
குறைந்தபட்ச இடம் தேவை
உட்புற விவசாயத்திற்கு ஏற்றது

புதுமையான நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலமும், அதிக தேவையுள்ள பொருட்களில் கவனம் செலுத்துவதன் மூலமும், தொழில் தொடங்குபவர்கள் தங்கள் லாபத்தை கணிசமாக அதிகரிக்க முடியும்.

Read more

சோலார் ட்ரையர்களைப் பயன்படுத்தி மாதம் ரூ.4 லட்சம் சம்பாதிக்கும் மலர் விவசாயி

கிலோ ரூ.2.74 லட்சம் மதிப்புள்ள உலகின் விலையுயர்ந்த மியாசாகி மாம்பழங்களை வளர்க்கும் இந்தியாவின் முதல் விவசாயி!

English Summary: Most Profitable Farming Businesses - Full Details Inside!
Published on: 09 September 2024, 09:57 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now