Farm Info

Wednesday, 11 May 2022 06:41 AM , by: R. Balakrishnan

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறிலிருந்து சுமார் 38 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கொழுக்கு மலை. இந்த மலை சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாக அழைக்கப்படுகிறது. கேரள - தமிழக எல்லையில் அமைந்துள்ள இந்த கொழுக்குமலை, கடல் மட்டத்திலிருந்து சுமார் 8000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. உலகின் மிக உயரத்தில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டமும் இங்கு தான்.

தேயிலை சாகுபடி (Tea Cultivation)

இயற்கை முறையில் தேயிலை சாகுபடி செய்யக்கூடிய இடமும் கொழுக்குமலைதான். இங்கு சூரிய உதயம் காண்பது இந்த இடத்தின் சிறப்பு. அதிகாலையில் மேகக்கூட்டங்களுக்கு நடுவே சூரியன் உதிப்பதை காண்பது நம்மை சொர்க்கத்தில் இருப்பது போல் உணரச் செய்யும்.

கொழுக்கு மலைக்கு செல்ல மூணாறிலிருந்து பயணம் செய்து சூரியநெல்லி அடையவேண்டும். அங்கிருந்து 12 கிலோமீட்டர்  தேயிலைத் தோட்டத்தில் தவழ்ந்து செல்லும் மேகக்கூட்டங்களுக்கு நடுவே உள்ள கரடுமுாரடான பாதை வழியாக செல்வது என்பது ஒரு வித்தியாசமான அனுபவமாக அமைகிறது. தற்போது கோடை காலம் துவங்கி உள்ளதால், சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர்.

அவர்களுக்கு சுற்றுலா துறை சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது என சுற்றுலாத்துரை அதிகாரி தெரிவித்தனர்.

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் குறைந்தது நிலத்தடி நீர்!

தேங்காய் விலை கடும் சரிவு: கவலையில் விவசாயிகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)