மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 5 September, 2020 5:28 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டாரப்பகுதியில், தரிசு நிலத்தை விவசாய நிலமாக மாற்றும் விவசாயிகளுக்கு ஹெக்டருக்கு ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் (National Agriculture Development Programme) 5 ஆண்டுகளாக பயிர் சாகுபடி செய்யாத தரிசு நிலத்தை, பயிர் சாகுபடிக்கு கொண்டு வரக்கூடிய விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரம் அரசு மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கமுதி வட்டாரத்திற்கு உட்பட்ட காடமங்கலம், பொந்தம்புளி, நீராவி, கள்ளிக்குளம், செங்கப்படை, நகரத்தாற்குறிச்சி வருவாய் கிராமங்களில் 70 ஹெக்டேர் தரிசு நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Credit : Oneindiatamil

இத்திட்டத்தின் ஒருபகுதியாக காடமங்கலம் வருவாய் கிராமத்தில் தரிசாக உள்ள கருவேல மரங்களை அகற்றி பயிர் சாகுபடிக்கு கொண்டு வரும் பணியை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் குணபாலன் கள ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் சோளம், கம்பு, உளுந்து, பாசிப்பயறு போன்ற பயிர் சாகுபடிக்கும் செலவின தொகைக்கு ஏற்ப மானியமும் வழங்கப்பட உள்ளது.

ஆய்வில் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் சேக்அப்துல்லா (மாநில திட்டம்), வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கெர்சோன்தங்கராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க...

மானிய விலையில் நெல் விதைகள் - வாங்கிப் பயனடைய உடுமலை விவசாயிகளுக்கு அழைப்பு!

PMKSY:சொட்டுநீர் பாசனம் அமைக்க 100% மானியம்- ஆனைமலை விவசாயிகளுக்கு அழைப்பு!!

English Summary: NDAP: Rs 10,000 per hectare subsidy for conversion of barren agricultural land: Agriculture Information!
Published on: 05 September 2020, 05:00 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now