Farm Info

Wednesday, 27 April 2022 07:38 AM , by: R. Balakrishnan

New industry in banana fiber

முந்திரி பழத்திலிருந்து உற்சாக பானம் தயாரிக்க முடியாவிட்டாலும் ஊட்டச்சத்து பானம் தயாரிப்பது குறித்து ஆய்வுகள் செய்து முடிவு எடுக்கப்படும் என தொழில்துறை அமைச்சரான தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். முந்திரி பழத்தில் இருந்து ஊட்டச்சத்து பானம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படுமா என பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய தங்கம் தென்னரசு, உற்சாக பானம் இல்லை என்றாலும் ஊட்டச்சத்து பானமாவது தயாரிக்கப்பட வேண்டும் என்பதை உறுப்பினர் கேட்டதை குறிப்பிட்டார்.

வாழை நார் (Banana Fiber)

இதனை வணிக ரீதியாகவும் தொழிற்சாலை அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்தும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், வாழையிலிருந்து நார், வாழைத் தண்டிலிருந்து பிஸ்கட், வாழைக் கிழங்கை சித்த மருத்துவத்திற்குப் பயன்படுத்தலாம். எனவே மேட்டுப்பாளையம் தொகுதியில் வாழை தொழிற்சாலை தொடங்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வாழை தொடர்புடைய தொழிற்சாலைகளுக்கு உலகளாவிய சந்தை ஒன்றை உருவாக்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டார்.

தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்க முன்வந்தாலும், ஐஐடி ஆகிய நிறுவனங்களை வைத்து ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முன்வாந்தாலும் தேவையான உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க

போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க சென்னையில் ரிமோட் கண்ட்ரோல்!

சுற்றுச்சூழலுக்கு ஆதரவான பொருட்கள் வாங்குவதில் இந்தியர்கள் ஆர்வம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)