மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 10 July, 2022 8:20 AM IST

மக்கள் அனைவருக்கும் உணவு வழங்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கெனத் தனி ரேஷன் அட்டை வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம், விவசாயிகளுக்கு சிலக் கூடுதல் சலுகைகள் கிடைக்கும். இதற்காக புதிய ரேஷன் கார்டு தயாரிக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று உத்தரகாண்ட் மாநில உணவு வழங்கல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் தகுதியில்லாத ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது ரேஷன் கார்டுகளை ஒப்படைக்குமாறு உணவுப் பொருள் வழங்கல் துறை வேண்டுகோள் விடுத்திருந்தது. மேலும், தகுதியற்ற ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷன் அட்டைகளை ஒப்படைப்பதற்கான கடைசி தேதி ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது. இதனைஏற்று, 91 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரேஷன் அட்டைகளை ஒப்படைத்துள்ளனர்.

தயாரிப்பு பணி

இதையடுத்து,மாநிலத்தில் 22 லட்சத்துக்கும் அதிகமான ரேஷன் கார்டுகள் உள்ளதால் மீண்டும் புதிய ரேஷன் கார்டுகள் தயாரிக்கும் பணி துரிதப்படுத்தப்படுகிறது. விரைவில் தகுதியானவர்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் உணவு வழங்கல் துறை அறிவித்துள்ளது.

கூடுதல் சலுகைகள்

இதைத்தவிர, மக்கள் அனைவருக்கும் உணவு வழங்கும் விவசாயிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவர்களுக்கெனத் தனி ரேஷன் அட்டை வழங்க உத்தரகாண்ட் மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம், விவசாயிகளுக்கு சிலக் கூடுதல் சலுகைகள் கிடைக்கும்.

அமைச்சர் தகவல்

இதற்காக புதிய ரேஷன் கார்டு தயாரிக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று உத்தரகாண்ட் மாநில உணவு வழங்கல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதேநேரம், தகுதியில்லாதவர்களின் ரேஷன் கார்டுகள் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து வரும் நாட்களில் புதிய அளவில் ரேஷன் கார்டுகள் தயாரிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும் படிக்க...

33 மாத சம்பளம் ரூ.24 லட்சத்தை திருப்பிக்கெடுத்த மனசாட்சியுள்ள ஆசிரியர்!

அடுத்த வாரம் குறைகிறது சமையல் எண்ணெய் விலை!

English Summary: New ration card for farmers-Government announcement!
Published on: 10 July 2022, 08:13 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now