மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 1 February, 2021 10:20 AM IST
Credit : Naidunia

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், நிதிச்சுமையை எதிர்கொள்ள ஏதுவாக பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருவதால், விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் மற்றும் நகைக்கடன்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குநர் பாலகிருஷ்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

பயிர்க்கடன் (Crop Loan)

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், மத்திய கூட்டுறவு வங்கியின் 27 கிளைகள், 238 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம், விவசாயிகளுக்கு பயிர்க்கடன், நகைக்கடன்கள் மற்றும் விவசாயம் அல்லாத பிற கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ரூ.543.80 கோடி (Rs.543.80 Crore)

நடப்பு நிதியாண்டில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர்க்கடனாக 76,263 பயனாளிகளுக்கு ரூ.543.80 கோடியும், சங்கங்கள் மற்றும் மத்திய வங்கி கிளைகள் மூலம் நகைக்கடன்கள் 1,42,146 நபர்களுக்கு ரூ.809.04 கோடியும் மற்றும் இதர கடன்களும் வழங்கப்பட்டுள்ளன.

உத்தரவு இல்லை (No Order)

விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கடன் வழங்கிட தேவையான அனைத்து வழிவகைகளையும் மத்திய வங்கி மூலம் மேற்கொண்டு வருகிறது.
பயிர்க்கடன் மற்றும் நகைக்கடன் நிறுத்தம் தொடர்பாக எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

தைப் பட்ட காய்கறிகளுக்கு என்ன விலை கிடைக்கும்-TNAUவின் முன்னறிவிப்பு!

ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க - ரூ.6 லட்சம் மானியம்!

விவசாயத்துறையில் அதிமுக அரசின் சாதனைகள்!

English Summary: No crop loan stop - Villupuram district administration announces!
Published on: 01 February 2021, 10:08 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now