Farm Info

Sunday, 13 November 2022 09:41 PM , by: Elavarse Sivakumar

பயிர் கழிவுகளை அகற்றுவதற்காக விளை நிலைங்களைத் தீயிட்டு எரிக்கும் விவசாயிகளுக்கு PM-Kisan நிதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் 13-வது தவணைத் தொகையைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சாகுபடி முடிந்ததும், விளைநிலங்களில் உள்ள பயிர் கழிவுகளை அகற்றுவதற்காக, அதாவது மறு சாகுபடிக்கு முன்பாக வைக்கோல் இட்டு நிலத்தைத் தீயிட்டுக் கொளுத்தும் நடைமுறை, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில், பல ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதிகரிப்பு

தற்போது இந்த மாநிலங்களில், காற்று மாசுபாடு கடுமையாக அதிகரித்து வருவதால், நிலத்தை எரிக்கும் நடைமுறையைக் கைவிட வேண்டும் என வேளாண்துறை சார்பில் தொடர்ச்சியாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களாக, விளைநிலங்களை தீயிட்டு எரித்தது தொடர்பான வழக்குகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால் அதிகரித்தக் காற்று மாசுபாடு, பள்ளிகளை மூட வைத்தது.

ரூ.6,000

இதையடுத்து காற்று மாசுபாட்டைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை உத்தரப்பிரதேச அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, பயிர்கழிவு எரிப்பில் ஈடுபடும் விவசாயிகள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு பிரதமரின் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் 6,000 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்ப மாட்டாது என உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.

தடுக்கப்படும்

குறிப்பாக இந்த பயிர் கழிவு எரிப்பில் ஈடுபடும் விவசாயிகள், ஏற்கனவே கிசான் சம்மன் யோஜனா திட்டத்தில் முன்பதிவு செய்திருந்தால், அவர்களுக்கு இந்த நிதி வழங்கப்படுவது தடுத்து நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, டெல்லி, ஹரியானா, பஞ்சாய் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் அதிகரித்துவரும் காற்று மாசுபாட்டைக் குறைப்பதைக் கருத்தில்கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

அபராதம்

அது மட்டுமல்ல, பயிர் கழிவு எரிப்பில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த நிலத்தின் விவசாயிக்கு ரூ.2,500 அபராதம் விதிக்கப்படும் என்றும், ஒரு ஏக்கருக்கு மேற்பட்ட நிலமாக இருப்பில், அபராதம் 5,000 விதிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

இத்தனை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலேர்ட்!

ஆதாருக்கு 10 ஆண்டுகள்தான்- அச்சச்சோ!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)