மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 2 November, 2021 10:03 AM IST
Credit : Twitter

தென் ஆப்ரிக்காவில் வெங்காயப் பண்ணையில் மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் வேலைக்கு இதுவரை 5 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.

வெளிநாட்டு வேலை 

கேரள மாநிலத்தைப் பொருத்தவரை, கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலம். அது மட்டுமல்லாமல், கடந்த சில ஆண்டுகளாக, புயலும், வெள்ளமும் கேரளாவை வரிகட்டிக் கொண்டுத் தாக்கி வருகின்றன.
இதன் காரணமாகவும், கடவுளின் தேசம் என வருணிக்கப்படும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் வெளியூர், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு வேலையைப் பெற தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு கேரள அரசு சார்பில் தலைநகர் திருவனந்தபுரத்தில் நடத்தப்பட்ட கருத்தரங்கத்தில் தென்கொரியாவில் விவசாயம் சார்ந்த வேலைவாய்ப்புகள் பற்றி விளக்கப்பட்டது.

இதில் எம்பிஏ பட்டதாரிகள் உட்பட 700 பேர் தென் கொரிய வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவதாகத் தெரிவித்தனர். 100க்கும் மேற்பட்டோரை பணியில் அமர்த்த தென் கொரிய வெங்காயப் பண்ணை தயாராக உள்ளது.

5,000 பேர் (5,000 people)

ஆனாலும் இதுவரை 5 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். ஏனெனில், ஒரு லட்சம் ரூபாய் சம்பளமாக இருந்தபோதிலும், அங்கு தங்குமிடம், உணவு ஆகியவற்றை வேலைக்கு வருபவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பண்ணை நிர்வாகம் கூறியுள்ளது.

அச்சம் 

இது ஒருபுறம் இருக்க, அங்கு நிலவும் மைனஸ் 20 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையும் விண்ணப்பதாரர்களுக்கு பெரும் நெருக்கடியாக இருப்பதால், பலரும் விண்ணப்பிக்க அச்சப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

இதைச் செய்தால் போதும்- விவசாயத்தில் கூடுதல் வருமானம் உறுதி!

சம்பா பயிர் காப்பீடு - விவசாயிகளுக்கு அழைப்பு!

English Summary: Onion farm work in South Africa - Rs 1 lakh a month salary!
Published on: 02 November 2021, 07:33 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now