Farm Info

Wednesday, 27 December 2023 04:44 PM , by: Muthukrishnan Murugan

e-NAM trade center

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் விடத்தகுளம் ரோட்டில் அமைந்துள்ள திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று (27.12.2023) ஒரே நாளில் ரூ.10,55,689/- க்கு வர்த்தகம் இ-நாம் ஏலம் மூலம் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

விவசாயிகள் விளைவிக்கும் விளைப்பொருள் இ-நாம் முறையில் விற்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இடைத்தரகர் பிரச்சினைகள் இன்றி, நேரடியாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவதால் இ-நாம் முறையில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படுகிறது. அந்தவகையில், இ-நாம் முறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று வர்த்தகம் நடைப்பெற்ற விவரங்கள் பின்வருமாறு-

காளப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒரு விவசாயியின் 197 குவிண்டால்  குதிரைவாலி ஏலத்திற்கு வந்தது.  அது சென்னை வியாபாரியினால் கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 43.50 க்கு கேட்கப்பட்டது. இதன் மூலம் ரூ.8,56,950/ -க்கு வர்த்தகம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த ஒரு விவசாயியின் 1176 கிலோ நிலக்கடலை பருப்பு  ஏலத்திற்கு வந்தது. அது சீர்காழி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் உட்பட மூன்று வியாபாரிகளால் கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ.95-க்கு கேட்கப்பட்டது. இதன் மூலம் ரூ.1,11,720/- க்கு வர்த்தகம் நடைபெற்றது.

திருமங்கலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் 590.500 கிலோ வரகு ஏலத்திற்கு வந்தது. அது விருதுநகர் வியாபாரியினால் கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ.38-க்கு  கேட்கப்பட்டது. இதன் மூலம் ரூ.22,439/-க்கு வர்த்தகம் நடைபெற்றது. திருமங்கலத்தை சேர்ந்த ஒரு விவசாயியின் 84 கிலோ மிளகாய் வத்தல் ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றுக்கு ரூ.200-க்கு விலை போனது. இதன் மூலம் ரூ.16,800/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

திருமங்கலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் 25 கிலோ ஆவாரம்பூ ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றுக்கு ரூ.90-க்கு விலை போனது. இதன் மூலம் ரூ.2250/-க்கு வர்த்தகம் நடைபெற்றது. திருமங்கலம் விவசாயியின் 338 கிலோ இருங்கு சோளம் ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றுக்கு ரூ.37-க்கு விலை போனது. இதன் மூலம் ரூ.12,506/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

Read more: தென்காசி மாவட்டத்தில் பயிர்ச்சேதம் எவ்வளவு? அமைச்சர் சொன்ன தகவல்

திருமங்கலம் விவசாயியின் 82 கிலோ வெங்காயம் ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றுக்கு ரூ.32-க்கு விலை போனது. இதன் மூலம் ரூ.2624/-க்கு வர்த்தகம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் மணியகாரன்பட்டியை சேர்ந்த விவசாயியின் 155 கிலோ மல்லி சில்லறை விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.  அது கோவை, தொண்டாமுத்தூர் மற்றும் திருப்பூர் நுகர்வோர்களுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.90-க்கு அனுப்பப்பட்டது. இதன் மூலம் ரூ.13,950/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

திருமங்கலம் விவசாயியின் 5 கிலோ அகத்தி விதை ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றுக்கு ரூ.500-க்கு விலை போனது. இதன் மூலம் ரூ.2500/-க்கு வர்த்தகம் நடைபெற்றது. ஆக மொத்தம் இன்று ஒரே நாளில் ரூ.10,55,689-க்கு வர்த்தகம் நடைபெற்று உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும்  விபரங்களுக்கு G.வெங்கடேஷ், கண்காணிப்பாளர் அவர்களை  9025152075 என்கிற எண்ணிலும், மேற்பார்வையாளரை 96008 02823 என்கிற எண்ணிலும், சந்தை பகுப்பாளரை 87543 79755- என்கிற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more: 

PM kisan திட்டத்தில் இணைய ஜன.15 வரை விவசாயிகளுக்கு ஒரு வாய்ப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)