நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 9 February, 2022 3:27 PM IST
Palm Jaggery production

உடன்குடி வட்டார பகுதியில் கருப்பட்டி உற்பத்திக்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி வட்டார பகுதியில் மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 6 மாதங்கள் மட்டுமே பனை ஏறி பதனீர் இறக்கும் தொழில் தீவிரமாக நடைபெறும். இப்பகுதியில் இறக்கப்படும் பதனீர் நல்ல சுவையுடன் இருக்கும். இதனால் இங்குள்ள பதனீருக்கு கடும் கிராக்கியும் உண்டு. அதுமட்டுமல்ல, பதனீரை கொண்டு இப்பகுதியில் கருப்பட்டி, கற்கண்டு, வெள்ளை நிற புட்டு கருப்பட்டி போன்றவை உற்பத்தி செய்யப்படுகிறது. ஏராளமான இடங்களில் பதனீர் மூலம் கருப்பட்டி உள்ளிட்ட பொருட்கள் உற்பத்தி குடிசை தொழிலாக நடந்து வருகிறது.

உடன்குடி கருப்பட்டி (UdanKudi palm jaggery)

`உடன்குடி கருப்பட்டி' என்றால் தமிழகம் மட்டுமல்ல, பல்வேறு மாநிலங்களிலும் மற்றும் வெளிநாடுகளிலும் பிரசித்தி பெற்றது. விற்பனை செய்யப்படும் இடங்களில் `உடன்குடி கருப்பட்டி இங்கு கிடைக்கும்' என்று அறிவிப்பு பலகை வைத்து விற்பனை செய்வார்கள். இந்த ஆண்டு ஓரளவு நல்ல மழை பெய்ததால், நிலத்தடி நீர்மட்டம் (Groundwater level) உயர்ந்துள்ளது.

இதை தொடர்ந்து தற்போது பதனீர் இறக்கும் தொழிலுக்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளன. பனை மரத்தின் காய்ந்த ஓலைகள், தும்புகள், பனைமட்டைகள், மட்டையுடன் இணைந்த முள் போன்ற கருக்குகள் ஆகியவற்றை அப்புறப்படுத்துதல், பனை ஓலைகளை விரித்து விடுதல் போன்ற பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்படி செய்தால் பதனீர் தரும் பாளைகள் வேகமாக வரும் என்கிறார்கள்.

கருப்பட்டி உற்பத்தி (Palm Jaggery Production)

உற்பத்தி தொடங்கும் உடன்குடி பகுதியில் வழக்கமான குளங்களை விட 40 ஆண்டுகளுக்குப் பின், காணாமல் போன 5 குளங்களை சீரமைத்து, தண்ணீர் தேக்கி வைத்திருப்பதால் இந்த ஆண்டு நிலத்தடி நீர் நல்ல சுவையான நீர் உள்ள நிலமாக மாறி இருப்பதாலும் பதனீர் இறக்கும் தொழில் முன்னதாகவே தொடங்கும் என எதிர்பார்க்கிறார்கள். இதன் மூலம் கருப்பட்டி உற்பத்தியும் தொடங்கும் என்று கருப்பட்டி உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திரிபலா: வீட்டிலேயே தயாரிக்கலாம்!

பாட்டி வைத்தியம் சரியா? என்ன சொல்கிறது மருத்துவ ஆராய்ச்சி!

English Summary: Palm Jaggery production: Work begins in Thoothukudi!
Published on: 09 February 2022, 03:27 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now