Farm Info

Thursday, 16 December 2021 02:02 PM , by: T. Vigneshwaran

Pension for small and marginal farmers too

பிரதான் மந்திரி கிசான் மன் தன் யோஜனா திட்டத்தை செயல்படுத்துவது குறித்து கவலை தெரிவித்த நாடாளுமன்றக் குழு, அதிக விவசாயிகளை ஈர்க்கும் வகையில் இந்தத் திட்டத்தில் விரிவான திருத்தங்களை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கூறியது. மேலும், தன்னார்வத் திட்டம் செப்டம்பர், 2019 இல் தொடங்கப்பட்டது. இதில், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, அவர்களின் பங்களிப்பு மூலம் ஓய்வூதியம் பெற விருப்பம் அளிக்கப்படுகிறது. இரண்டு ஹெக்டேர் நிலம் உள்ள விவசாயிகளும் பயனடையும் வகையில், இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

விவசாயத்திற்கான நாடாளுமன்றக் குழு, தனது 24வது அறிக்கையில், இந்தத் திட்டத்திற்கு அதிக விவசாயிகளை ஈர்க்காததற்கான காரணத்தை அரசு கண்டறிந்து, அதிக எண்ணிக்கையிலான விவசாயிகளை ஈர்க்கும் வகையில் இந்தத் திட்டத்தில் விரிவான சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று தெரிவித்தது. நாடாளுமன்ற உறுப்பினர் பி.சி.காட்டிகௌடர் தலைமையிலான, இந்தக் குழு வழங்கிய ஆலோசனைகளின் பேரில் அரசு தயாரித்த 31ஆவது நடவடிக்கை அறிக்கை செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

திட்டத்திற்கு விரிவான மறுசீரமைப்பு தேவையான அறிவுறுத்தல்(Instruction required for detailed restructuring of the project)

 இத் திட்டத்தில் அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் சேரவில்லை என்பதை வேளாண் அமைச்சகமே ஏற்றுக்கொள்கிறது என்று குழு கூறியுள்ளது. 18 முதல் 40 வயதுக்குட்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதே இதற்குக் காரணம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றக் குழு தனது பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாதது, துறையின் மோசமான செயல்பாட்டைக் காட்டுகிறது என்று அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த அணுகுமுறையில் விரைவில் நடவடிக்கை எடுக்க, மற்றும் கிசான் மன் தன் யோஜனாவில் விரிவான திருத்தங்களைச் செய்வதற்கான ஆலோசனையை குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

கிசான் மன் தன் யோஜனா(Kisan man Dhan yojana)

மோடி அரசின் கிசான் மன் தன் யோஜனா திட்டம், 31 மே 2019 அன்று தொடங்கப்பட்டதாகும். இதன் கீழ், நாட்டில் உள்ள அனைத்து சிறு மற்றும் குறு நில விவசாயிகளுக்கும், 60 வயது பூர்த்தி ஆன பின், விவசாயிகளுக்கு மாதம் 3,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதன் கீழ், பயனாளிகளுக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ.3000 வழங்கப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 36000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க:

PMKSY: ரூ.93,068 கோடி மதிப்பில் விவசாயிகளுக்கு நலத்திட்டம்!

விவசாயிகளுக்கு தண்ணீர் தொட்டி கட்ட ரூ.75,000 மானியம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)