மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 9 September, 2021 7:38 AM IST

நெல் சாகுபடியில் இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை ஒரு மிகப்பெரும் சவாலாக விளங்குகிறது.

இருந்த போதிலும் ரசாயன பூச்சிக்கொல்லி அல்லாத ஒருங்கிணைந்த பாதுகாப்பு முறைகளை ஆரம்பத்தில் இருந்து முறையாகக் கடைப்பிடிப்பதால் பூச்சி மற்றும் நோய்களை வெகுவாக கட்டுப்படுத்தலாம்.

கோடை உழவின் அவசியம் (The need for summer plowing)

கோடை உழவு செய்வதால் மண்ணில் உள்ள பூச்சிகளின் கூட்டுப்புழுக்கள் அழிக்கப்படுகின்றன. வரப்புகளைச் சுத்தமாக வைத்திருக்கவேண்டும். இனக்கவர்ச்சிப் பொறி மற்றும் விளக்குப் பொறி வைத்துப் பூச்சிகளின் நடமாட்டம் மற்றும் எண்ணிக்கையை கண்காணிக்கலாம்.

இலைவழி ஊட்டம் (Foliar feeding)

இதற்கு ஏற்ற வகையில் கட்டுப்பாடு முறைகளைக் கையாள்வதும் அவசியமாகிறது. இயற்கை முறையில் கிடைக்கக்கூடிய தாவர வகை பூச்சி மருந்துகள் மற்றும் நோய்க்கட்டுப்பாடு காரணிகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம். பஞ்சகாவ்யா கரைசலை 3 சதவீதம் இலைவழி ஊட்டமாக தெளிக்க வேண்டும்.

இலை சுருட்டுப்புழு (Leaf curl worm)

ஐந்து சதவீதம் வேப்பங்கொட்டை சாறு தெளித்தல் வேண்டும். டிரைக்கோ கிரம்மா  ஜப்பானிக்கம் என்ற ஒட்டுண்ணி அட்டையை, ஏக்கருக்கு 2 சி.சி அளவில் ஒரு வார இடைவெளியில் மூன்று முறை கட்டுதல் வேண்டும்.
பேசில்லஸ் துரிஞ்சன்சிஸ் உயிரியல் காரணி ஏக்கருக்கு 400 கிராம் தெளித்தல் அவசியம். தத்துப்பூச்சி மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சி காய்ச்சலும் பாய்ச்சலுமாக நீர் பாசனம் செய்தல் கட்டாயமாகிறது. வேப்பங்கொட்டைச் சாறு 5 சதவீதம் அல்லது வேப்பெண்ணெய் 2 சதவீதம் தெளிக்க வேண்டும்.

வாடல் நோய் (Dryness)

வரப்பில் உள்ள களைகளை அகற்றுதல் இன்றியமையாதது. அதேநேரத்தில் எதிர்ப்புச் சக்தி கொண்ட ரகங்களை சாகுபடி செய்வது மிக மிக முக்கியம். சூடோமோனாஸ் உயிரியல் காரணி 0.2 சதவீதம் கரைசலை சரியான இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும்.

இலைக்கருகல் நோய் (Leaf blight)

சூடோமோனாஸ் உயிரியல் காரணி 0. 2 சதவீதம் கரைசலை நடவு செய்த 45-ம் நாள் முதல் 10 நாள்கள் இடைவெளியில் மூன்று முறை தெளித்தல் வேண்டும்.
வேப்பங்கொட்டை சாறு 5 சதவீதம் அல்லது வேப்பெண்ணெய் 2 சதவீதம் தெளிப்பது கட்டாயம். பசுவின் சாணம் 20 சதவீதம் கரைசலை நோய் கண்படும் தருணத்தில் 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளித்தல் அவசியமாகிறது.

மகசூல் (Yield)

இயற்கை வேளாண்மையில் நெல் சாகுபடி செய்யும் பொழுது ஆரம்ப கால சமயங்களில் மகசூல் குறைய வாய்ப்புள்ளது. இயற்கை முறையில் சாகுபடி செய்வதால் மண்வளம் பாதுகாக்கப்பட்டு மகசூல் அதிகரிக்க வாய்ப்பு வாய்ப்புள்ளது. மேலும், உற்பத்தி செலவு குறைந்தது நிகர லாபம் அதிகரிக்கும். சுற்றுப்புறச் சூழல் மாசு படாதவாறு பாதுகாக்கப்படுகிறது.

தகவல்

செல்வநாயகம்

தஞ்சாவூர் மாவட்ட விதை சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர்

மேலும் படிக்க...

தரிசு நிலங்களைச் சாகுபடி நிலங்களாக மாற்ற விவசாயிகளுக்கு மானியம்!

வீடு தேடி வரும் விவசாய உபகரணங்கள்- அமேசானின் அசத்தல் ஏற்பாடு!

English Summary: Pest Management in Paddy- Natural Crop Protection!
Published on: 08 September 2021, 09:00 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now