Farm Info

Monday, 18 October 2021 10:10 AM , by: Elavarse Sivakumar

டிராக்டர் பயன்படுத்த ஏதுவாக விவசாயிகளுக்கு பெட்ரோல் மற்றும் டீசலை, மானிய விலையில் வழங்குவது என கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

உயரும் விலை (Rising prices)

ஆரம்பத்தில் மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் விலை பின்னர் எண்ணெய் நிறுவனங்களின் மூலம் தினமும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதாவது சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசல் விலைக் குறைந்த போதிலும், இந்தியாவில் குறைவதில்லை.

அரசு முடிவு (Government decision)

ஏற்கனவே ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டுவதாகச் சொல்லிக்கொண்டு, விலை அதிகரிப்பைத் தொடர்கின்றன. இதனால் விவசாயிகள், நடுத்தர வாசிகள், பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், முதற்கட்டமாக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, மானிய விலையில் பெட்ரோல், டீசலை வழங்குவது என கர்நாடக மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2020 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமன் செய்வதற்காக நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகள் உயர்த்தப்பட்டன. இதனால், பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரித்துள்ளது. குறிப்பாக கர்நாடகாவில், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.91க்கும், டீசல் விலை ரூ.98.52க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நிதிச்சுமை (Financial burden)

இந்த மாநிலத்தில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர், விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டிருப்பதால், இந்த பெட்ரோல், டீசல் விலைஉயர்வு, அரசுக்கும் பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. எதிர்வரும் ரபிப் பருவத்தைக் கருத்தில் கொண்டு, நிலத்தைச் சமன் செய்ய டிராக்டர்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டிய நிலையில், சராசரி மற்றும் அதற்குக் குறைவான வருமானம் ஈட்டும் விவசாயிகள் பெரும் நிதிச்சுமையை எதிர்கொள்ள நேரிடும்.

ரூ.20 மானியம் (Rs.20 subsidy)

எனவே பெட்ரோல், டீசலுக்கு லிட்டருக்கு 20 ரூபாய் வீதம் மானியம் வழங்கினால், அது விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கும் என கர்நாடக அரசு கருதுகிறது. தொடர் பரிசீலனைக்குப் பிறகு இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என கர்நாடக வேளாண்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

வாழைப்பழத்திற்கு இந்த ஆண்டு என்ன விலை கிடைக்கும்? TNAU கணிப்பு!

அறுவடை நெல் பாதிக்க விடக்கூடாது- அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவு!

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)