மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 23 December, 2021 5:14 PM IST
To get high yield in turmeric

இந்தியாவில் உணவு, மருந்து, அழகு சாதன பொருட்களில் மஞ்சள் (Turmeric) முக்கிய பங்கு வகிக்கிறது. உலகளவிலான உற்பத்தியில் 74 - 80 சதவீதம் இந்தியாவில் பயிரிடப்பட்டு, 80 சதவீதம் வரை உள்நாட்டிலேயே பயன்படுத்தப்படுகிறது.

மஞ்சளின் சராசரி உற்பத்தி திறன் எக்டேருக்கு 5 டன். இந்தியாவில் பயிரிடும் பரப்பு மற்றும் உற்பத்தியில் தமிழகத்திற்கு இரண்டாவது இடம். 36ஆயிரம் எக்டேரில் பயிரிடப்பட்டு 19 ஆயிரம் டன்கள் கிடைக்கிறது. இதில் குர்குமின் 3 - 7 சதவீதம் உள்ளது. விரலி மற்றும் தாய் மஞ்சளை விதைப்புக்கு பயன்படுத்தலாம்.

நோய்த் தடுப்பு மேலாண்மை (Disease Control Management)

ஏக்கருக்கு 1000 முதல் 2000 கிலோ மஞ்சள் தேவை. ஒரு லிட்டர் தண்ணீரில் 3 கிராம் காப்பர் ஆக்ஸிகுளோரைடு கரைசலில் அரைமணி நேரம் ஊறவைத்து நட்டால் கிழங்கு அழுகல் நோயை கட்டுப்படுத்தலாம். ஒரு லிட்டர் தண்ணீரில் ஒன்றரை கிராம் பாசலோன் 35 இ.சி. கரைசலில் கலந்து 15 நிமிடம் ஊறவைத்தால் செதில்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெறலாம்.

மஞ்சள் நாற்றங்கால் (Turmeric Plant)

மஞ்சள் கிழங்கிற்கு பதிலாக மஞ்சள் நாற்றை இனப்பெருக்கம் செய்து சாகுபடி (Cultivation) செய்யலாம். கிழங்குகளை தேர்ந்தெடுத்து 0.3 சதவீதம் மேன்கோசெப், 0.075 சதவீதம் குயினால்பாஸ் கொண்டு அரைமணி நேரம் விதைநேர்த்தி செய்து ஒன்றரை மாதங்கள் வரை நிழலில் வாட விட வேண்டும். கிழங்குகளை ஒரு பரு (கணு) உள்ள சிறு துண்டுகளாக வெட்டி பனைஓலை பாயில் வைத்து மட்கிய தென்னை நார் கழிவால் மூடவேண்டும். லேசாக நீர் தெளித்து நான்கு நாட்கள் வைத்திருக்க வேண்டும். முளைப்பது லேசாக தெரிந்தவுடன் கிழங்கு துண்டை எடுத்து 2 கிராம் கார்பன்டசிம், 0.3 சதவீத மேன்கோசெப் கலந்த நீரில் அரைமணி நேரம் ஊறவைத்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

இரண்டு பங்கு தென்னை நார்க்கழிவு, ஒரு பங்கு மண்புழு உரம் கலக்க வேண்டும். இதில் ஒரு கிலோ அளவிற்கு 10 கிராம் டிரைகோடெர்மா கலக்கலாம். இதை குழித்தட்டுகளில் நிரப்பி முளைத்த கணுவை நடவு செய்ய வேண்டும். 50 சதவீத நிழல் வலை கூடாரத்தில் அடுக்கி பூவாளியில் நீர் தெளிக்க வேண்டும். ஒன்றிரண்டு இலைகள் வந்தவுடன் ஹூயூமிக் அமிலம் 0.5 சதவீதம் தெளிக்கலாம். இது தெளித்த 10 நாட்களுக்கு பின் 19:19:19 நீரில் கரையும் no தெளிக்க வேண்டும். துண்டு வெட்டி நடவு செய்த 30 - 35 நாட்களுக்குள் நாற்று நடவுக்கு தயாராகி விடும்.

- மாலதி, உதவி பேராசிரியை

ஜெகதாம்பாள், ஒருங்கிணைப்பாளர் வேளாண்மை அறிவியல் நிலையம்

சந்தியூர் சேலம், 97877 13448

மேலும் படிக்க

இயற்கை விவசாயத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்: பிரதமர் மோடி!

வேளாண் விளைபொருள் பட்டியலில் இருந்து பருத்தி நீக்கம்: அதிர்ச்சியில் விவசாயிகள்

English Summary: Pit Nursery production to get high yield in turmeric
Published on: 23 December 2021, 05:14 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now