மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 28 March, 2021 5:20 PM IST

விவசாயிகளுக்கு பயிர் சாகுபடியில் பெரும் பிரச்னையாக இருப்பது பூச்சி தாக்குதலாகும். பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, அதிகம் செலவு செய்ய வேண்டியுள்ளது. இதனால், விளைச்சலும் பாதிக்கப்பட்டு, விளைபொருளின் தரம் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், முக்கிய பயிருடன், அதற்கேற்ற கலப்பு மற்றும் ஊடுபயிர்களை சாகுபடி செய்வதால், பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த முடியும் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த

பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவது தொடர்பாக வேளாண் அலுவலர் துளசிமணி கூறுகையில்,

விளைநிலத்தை சுற்றிலும் வரப்பு ஓரங்களில் தட்டைப்பயறு பயிரிட்டால், பொறிவண்டுகள் அந்த பயிரில் குடியேறும். அவை, சாறு உறிஞ்சம் பூச்சிகளை அழிக்கும்.

நிலக்கடலை சாகுபடியில், வரப்பு ஓரங்களில், 2 மீட்டர் இடைவெளியில் ஆமணக்கு செடிகளை நட்டால், புரோடீயா புழுக்களை கவர்ந்து அழிக்கலாம். நிலக்கடலையில் ஏக்கருக்கு, 250 கிராம் கம்பு கலப்பு பயிராக விதைத்தால், நிலக்கடலையை தாக்கும் சுருள்பூச்சி, இலைப்பேன் மற்றும் அந்துபூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.

சோளத்தில், துவரை, பாசிப்பயறு ஆகியவற்றை ஊடுபயிராக சாகுபடி செய்தால், தத்துப்பூச்சி, காய்ப்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.

மக்காச்சோளத்தில் ஊடுபயிராக ஆமணக்கு பயிரிட்டால் புரொடினியா புழுக்களைக் கட்டுப்படுத்த முடியும். மக்காச்சோளத்தில் ஊடுபயிராக சோளம் பயிரிடுவதால் குருத்து ஈ மற்றும் தண்டு துளைப்பானின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தலாம்.

இதுபோன்று முக்கிய பயிர்களை அதற்கேற்றார்போல கலப்பு பயிர்களை பயிரிடுவதன் மூலம் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த முடியும் என்றார்.

மேலும் படிக்க....

தமிழக காய்கறிகளை திருப்பி அனுப்பும் கேரளா! - அதிக ரசாயன மருந்து பயன்படுத்தப்படுவதாக புகார்!!

வேளாண் மற்றும் அறிவியல் பட்டதாரிகளுக்கு இலவச பயிற்சி- அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வழங்குகிறது!

English Summary: Plant mixed with the main crop to control pest infection agriculturist advice!!
Published on: 28 March 2021, 05:20 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now