Farm Info

Friday, 08 April 2022 06:13 PM , by: Elavarse Sivakumar

பிஎம் கிசான் திட்டத்தில், விவசாயிகளின் வங்கிக்கணக்கில், 11-வது தவணைத் தொகை எப்போது வரவு வைக்கப்பட உள்ளது, என்பது குறித்த முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

PM-Kisan

இந்தியாவில் உள்ள நலிவடைந்த விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கவும் அவர்களது வாழ்வாதாரத்தை பெருக்க ஏதுவாகவும், மத்திய அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என மூன்று தவணைகளாகப் பிரித்து வழங்கப்படுகிறது. இந்தப் பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.

11ஆவது தவணைத் தொகை

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 10 தவணைகள் வழங்கப்பட்டுவிட்டன. ஜனவரி 1ஆம் தேதியில்தான் விவசாயிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி கையால் 10ஆவது தவணைப் பணம் விடுவிக்கப்பட்டது. இந்நிலையில் 10ஆவது தவணைப் பணம் எப்போது கிடைக்கும் என்று சுமார் 12 கோடி விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

அடுத்த தவணை எப்போது?

பொதுவாக, ஏப்ரல் - ஜூலை மாதங்களில் பிஎம் கிசான் தவணைப் பணம் வழங்கப்படுவது வழக்கம். இதற்கும் முன்னர் வெளியாகியிருந்த தகவலில் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நிதியுதவி கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், இன்னும் பணம் வரவில்லை. இந்நிலையில், தற்போது இதுகுறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. ராம நவமி அல்லது அம்பேத்கர் பிறந்த நாளன்று விவசாயிகளுக்கு நிதியுதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனில், ஏப்ரல் 10ஆம் தேதி அல்லது ஏப்ரல் 14ஆம் தேதி பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க...

கோடை வெப்பத்தைத் தகிக்க வைக்கும் தயிர்- எந்த நேரத்தில் சாப்பிடலாம்?

புற்றுநோய், சுகர் என பல நோய்க்குத் தீர்வு வேண்டுமா? இந்த ஒரு இலையே போதும்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)