மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 23 September, 2021 10:09 AM IST
PM Kisan Samman Nidhi Yojana

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விரைவில் இரு மடங்கு நிதியுதவி வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்தின் அடிப்படையில் நாட்டிலுள்ள நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணைகளாக ரூ.6,000 நிதியுதவி வழங்கப்டுகிறது. ஆண்டுக்கு மூன்று முறை தலா ரூ.2,000 என ஒவ்வொரு ஆண்டும் 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

இதற்கான பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரையில் மொத்தம் 9 தவணைகளில் நிதியுதவி விவசாயிகளின் வங்கி கணக்கில் சென்றுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 9ஆவது தவணைக்கான தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

இந்த திட்டம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், மற்றொரு தகவல் வந்துள்ளது. அதாவது, விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவி விரைவில் இரு மடங்காக உயரவுள்ளது. பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் 2000 ரூபாய்க்கு பதிலாக 4000 ரூபாய் தவணை வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், அதற்கான ஆலோசனையில் அரசு ஈடுபட்டுள்ளதாகத் தெரியவர்ந்துள்ளது.

இத்தகவல் உறுதிசெய்யப்பட்டு, அதன்படி அறிவிப்பு வெளியானால் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 6,000 ரூபாய் கிடைப்பதற்குப் பதிலாக மூன்று தவணைகளில் ரூ.12,000 கிடைக்கும் என்று எதிர்பாக்கப்டுகிறது. இது தொடர்பாக பிகார் மாநில வேளாண் துறை அமைச்சர் அமரேந்திர பிரதாப் சிங், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை சந்தித்துப் பேசியதாகவும், இது தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுபற்றிய இறுதி முடிவு இன்னும் வெளியாகவில்லை.

மேலும் படிக்க:

PM Kisan: விவசாயிகளின் கணக்கில் 1.58 லட்சம்! 10 வது தவணையின் 2000 ரூபாய்!

PM Kisan: GOI மொபைல் செயலி பதிவு செய்து! ரூ.6000 பெறுங்கள்!

English Summary: PM Kisan: 12,000 rupees fund for farmers soon! When!
Published on: 23 September 2021, 10:09 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now