நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 May, 2023 3:57 PM IST
PM Kisan - Aadhar card

இந்தியாவில் விவசாயிகளுக்கான பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இதுவரையில் 13 தவணைத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளது. அடுத்ததாக 14வது தவணைத் தொகை எப்போது கிடைக்கும் என விவசாயிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பிஎம் கிசான் (PM Kisan)

இந்தியாவில் விவசாயிகளுக்கு உதவக் கூடிய வகையில், பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, ஒரு நிதியாண்டில் 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 என, ரூ.6000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகையை பெறுவதற்கு சில நிபந்தனைகளும் உள்ளது.

இதுவரை பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 13 தவணைத் தொகை பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 14 வது தவணைத் தொகை எப்போது கிடைக்கும் என கேள்வி எழுப்பபட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து புதுச்சேரி கூடுதல் வேளாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 14 வது பிஎம் கிசான் தவணைத் தொகை வருகின்ற ஜூன் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் கட்டாயம்

பிஎம் கிசான் தவணைத் தொகையைப் பெற விவசாயிகள் கட்டாயமாக வங்கி கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் வருகின்ற மே மாதம் 15 ஆம் தேதிக்குள் வங்கி கணக்கு மற்றும் ஆதார் எண் இணைப்புப் பணியை முடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க 100% மானியம்: சிறு, குறு விவசாயிகளுக்கு அழைப்பு!

தமிழ்நாடு அரசின் “செழிப்பு” இயற்கை உரம்: விற்பனையைத் தொடங்கி வைத்தார் முதல்வர்!

English Summary: PM Kisan: Aadhaar link is mandatory to get Rs 2000!
Published on: 13 May 2023, 03:57 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now