Farm Info

Saturday, 13 May 2023 03:53 PM , by: R. Balakrishnan

PM Kisan - Aadhar card

இந்தியாவில் விவசாயிகளுக்கான பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இதுவரையில் 13 தவணைத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளது. அடுத்ததாக 14வது தவணைத் தொகை எப்போது கிடைக்கும் என விவசாயிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பிஎம் கிசான் (PM Kisan)

இந்தியாவில் விவசாயிகளுக்கு உதவக் கூடிய வகையில், பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, ஒரு நிதியாண்டில் 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 என, ரூ.6000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகையை பெறுவதற்கு சில நிபந்தனைகளும் உள்ளது.

இதுவரை பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 13 தவணைத் தொகை பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 14 வது தவணைத் தொகை எப்போது கிடைக்கும் என கேள்வி எழுப்பபட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து புதுச்சேரி கூடுதல் வேளாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 14 வது பிஎம் கிசான் தவணைத் தொகை வருகின்ற ஜூன் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் கட்டாயம்

பிஎம் கிசான் தவணைத் தொகையைப் பெற விவசாயிகள் கட்டாயமாக வங்கி கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகள் வருகின்ற மே மாதம் 15 ஆம் தேதிக்குள் வங்கி கணக்கு மற்றும் ஆதார் எண் இணைப்புப் பணியை முடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க 100% மானியம்: சிறு, குறு விவசாயிகளுக்கு அழைப்பு!

தமிழ்நாடு அரசின் “செழிப்பு” இயற்கை உரம்: விற்பனையைத் தொடங்கி வைத்தார் முதல்வர்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)