Farm Info

Friday, 09 December 2022 01:45 PM , by: Deiva Bindhiya

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் தொடக்க விழா நேற்று முக்கிய பிரதிநிதிகள் மக்களின் கேள்விக்கு பதளித்து தொடங்கி வைத்தனர். இந்நிலையில் 9 டிசம்பர் 2022, மாலை 5 முதல் 6.15 மணி வரை சென்னையில் உள்ள லீலா பேலஸில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தை துவக்கி வைப்பார்.

2.விவசாயிகளுக்கு பனைமரம் ஏறுவதற்கு அறுவடை செய்வதற்கும் உதவும் உபகரணங்களுக்கு 75% மானியம்!

தமிழ்நாடு தோட்டக்கலை மேம்பாட்டு முகமை சார்பாக, பனை மேம்பாட்டு இயக்கம் 2022-23 வழங்கும் பனை ஏறும் விவசாயிகளுக்கு பனைமரம் ஏறுவதற்கும், அறுவடை செய்வதற்கும் உகந்த உபகரணங்கள் வழங்குதல், ஒரு அலகிற்கு 75 சதவீதம் மானியமாக ரூ.4500 வழங்கப்படும். இத் திட்டத்தில் பயன்பெற http://www.tnhorticulture.tn.gov.in/tnhortnet/registration_new.php என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

3.விவசாயிகள் இடுபொருட்கள் வாங்க, வேளாண் அமைச்சகம் அறிவுறுத்தல்

விவசாயித்திற்கு தேவையான பல்வேறு உதவிகளையும், திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது. இந் நிலையில், மிகவும் அவசியமான இடுபொருட்கள் வாங்கவும் அரசு உதவி செய்கிறது. அந்த வகையில், விவசாயிகள் தங்களுக்கு தேவையான இடுபொருளை பெறுவதற்கு உழவன் செயலியில் அல்லது அக்ரிஸ்நெட் இணையத்தளத்தில் பதிவு செய்து பயன் பெறுமாறு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு அருகிலுள்ள வேளாண் விரிவாக்க மையங்களை அணுகுங்கள்.

4.மின்சாரம் துண்டிப்பை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

கோவை: மக்கள் தண்ணீர் திருடுவதை தடுக்கும் வகையில், பரம்பிக்குளம்-ஆளியார் திட்ட கால்வாயை ஒட்டிய நிலங்களுக்கு மின் இணைப்பை துண்டிப்பதை மாவட்ட நிர்வாகம் கைவிட வலியுறுத்தி, பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான விவசாயிகள், பெண்கள் உட்பட வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்குத் தலைமை வகித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் சு.பழனிசாமி, உண்மையான விவசாயிகளுக்கு மின்சாரம் துண்டிப்பதை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், “சில விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் விவசாயத் தேவைகளுக்கு அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார்கள். பிஏபி தண்ணீரை வேறு தேவைகளுக்கு பயன்படுத்துவோர் மீது மட்டுமே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தி இப் போராட்டத்தை மேற்கொண்டதாக தெரிவித்தார்.

5.தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் சிறப்புரை

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.22.20 கோடி செலவில் 57 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, ரூ.34.14 கோடி மதிப்பீட்டிலான 23 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார், பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை முதல்வர் அவர்களை பார்வையிட்டார, மேலும் பல ரூ.182.56 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

6.e-nam: மின்னணு தேசிய வேளாண் சந்தை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

வியாழக்கிழமை மாலை, சென்னை தலைமைச் செயலகத்தில் மின்னணு தேசிய வேளாண் சந்தை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் துறையின் செயலர், இயக்குநர், மாநில வணிகர் சங்க தலைவர், மற்றும் உயர் அதிகாரிகளுடன், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.

7.விரைவில் திருவாரூரில் சோலார் பூங்கா அமைக்கப்பட உள்ளது

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில், இந்தியாவிலேயே அதிகளவு காற்றாலை மின் உற்பத்தி செய்யும் தமிழ்நாடு, அடுத்த 10 ஆண்டுகளில் 20,000 மெகா வாட் அளவில் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யும் நோக்கில், முதற்கட்டமாக திருவாரூரில் சோலார் பூங்காவை அமைக்கவிருக்கிறது.

8. 20 நடமாடும் காய்கனி அங்காடிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்: CM Stalin

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, செங்கல்பட்டு, திருப்பூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் நுகர்வோரின் இல்லத்திற்கே சென்று பண்ணைக் காய்கறிகளை விற்பனை செய்திடும் பொருட்டு 40 இலட்சம் ரூபாய் மதிப்பில் 20 நடமாடும் காய்கனி அங்காடிகளை முதலமைச்சர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

9. PM KIsan E-(KYC) பதிவை புதுப்பிக்க அதிகாரி வேண்டுகோள்

பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கவுரவ நிதி திட்டத்தின் கீழ் தங்களது பெயரில் நேரடி நிலமுள்ள சிறு. குறு மற்றும் இதர விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் பயிர் சாகுபடிக்கு தேவையான இடு பொருட்களை பெற்று பண்ணை வருவாயை உயர்த்திடும் பொருட்டு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் தொடர்ந்து ஊக்கத்தொகையினை பெற்றிட விவசாயிகள் தங்களின் ஆதார் விவரத்தினை சரிபார்த்து E_KYC செய்து பதிவை வருகிற 15ந் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

10.மாண்டுஸ் புயலின் தாக்கம்: அரசின் நடவடிக்கை என்ன?

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளதாவது, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே, மகாபலிபுரத்திற்கு அருகில், நள்ளிரவு மற்றும் சனிக்கிழமை (டிசம்பர் 10) அதிகாலை இடையே 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். இதன் தாக்கத்தால் சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் புயலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர், மேலும் உடனடி சேவைக்கு சுமார் 169 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க:

PM Kisan Update| PMFBY| தமிழக விவசாயிகள் சத்தீஸ்கர் முதல்வருக்கு பாராட்டு| ICAR தேனீவளர்ப்பு பயிற்சி

Mandous Cyclone| மூலிகை தோட்டம் அமைக்க 50% மானியம்| விவசாயிகள் விநாயகரிடம் மனு தாக்கல்| தீப திருவிழா

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)