அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 7 March, 2022 11:00 AM IST
PM Kisan Scheme

PM-kisan திட்டத்தின் 11வது தணைத் தொகை ஹோலிப் பண்டிகைக்குப் பிறகு (18.02.2022), விவசாயிகளின் வங்கிக்கணக்கில் பட்டுவாடா செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் இதுவரை விவசாயிகளின் கணக்கில் 10 தவணைகளை செலுத்தியுள்ள  மத்திய அரசு, விரைவில் 11வது தவணைத்தை தொகையை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்த உள்ளது.

பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டம்: நீங்களும் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்கிறீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு பெரிய செய்தி இருக்கிறது. இதுவரை விவசாயிகளின் கணக்கில் 10 தவணை பணம் செலுத்தப்பட்டுள்ள மத்திய அரசு, விரைவில் 11வது தவணை பணமும் விவசாயிகளின் கணக்கில் செலுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் நீங்கள் இதுவரை பதிவு செய்யவில்லை என்றால், உடனடியாக அதைச் செய்யுங்கள். இந்தத் திட்டத்தின் 11வது தவணைப் பணம் எந்த நாளில் விவசாயிகளின் கணக்கில் மாற்றப்படும் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

10வது தவணை ஜனவரி 1ம் தேதி மாற்றப்பட்டது

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் 10வது தவணை பணம் ஜனவரி 1, 2022 அன்று விவசாயிகளின் கணக்கில் மாற்றப்பட்டது. நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளின் கணக்குகளுக்கு ரூ.2000 தவணையாக மாற்றப்பட்டது.

ஹோலிக்குப் பிறகு கணக்கில் வரும் பணம் 

PM கிசான் திட்டத்தின் கீழ், ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரை விவசாயிகளுக்கு முதல் தவணை பணம் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், இரண்டாவது தவணையின் பணம் ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரை மாற்றப்படுகிறது. இது தவிர, மூன்றாவது தவணைக்கான பணம் டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரை மாற்றப்படுகிறது. அதன்படி ஏப்ரல் தொடக்கத்தில் விவசாயிகளின் கணக்கில் 11 தவணை பணம் செலுத்தப்படும்.

ஆன்லைனில் பதிவு செய்யலாம்

இந்த திட்டத்தில் நீங்கள் இதுவரை பதிவு செய்யவில்லை என்றால், நீங்கள் விரைவில் பதிவு செய்ய வேண்டும். இந்த திட்டத்தில் பதிவு செய்யும் செயல்முறை மிகவும் எளிதானது. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்யலாம். இது தவிர, பொது சேவை மையத்திற்கும் சென்று பதிவு செய்யலாம்.

இவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்

2 ஹெக்டேர் அதாவது 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ள விவசாயிகளுக்கு மட்டுமே PM கிசான் திட்டத்தின் பலன் கிடைக்கும், ஆனால் எந்த விவசாயி வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால், அந்த விவசாயிகளுக்கு இந்த திட்டத்தின் பலன் கிடைக்காது.  இது தவிர இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் ரேஷன் கார்டு வைத்திருப்பது அவசியம்.

முறைகேடு

இத்திட்டத்தின் கீழ் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க ஏதுவாக, மத்திய அரசு ரேஷன் கார்டை அவசியமாக்கியுள்ளது. சமீபகாலமாக அரசின் இந்த திட்டத்தில் தகுதியற்ற விவசாயிகள் பலர் பயன்பெறுவது தெரிய வந்தது. இந்த அனைத்து காரணங்களையும் கருத்தில் கொண்டு, ரேஷன் கார்டு அவசியம். ரேஷன் கார்டை எந்த விவசாயியும் புதுப்பிக்கவில்லை என்றால், அவரது 11வது தவணை பணம் சிக்கியிருக்கலாம்.

மேலும் படிக்க..

PM கிசான் தொகை இரட்டிப்பு! 2000 க்கு பதிலாக ரூ.4000! அரசின் திட்டம்!

PM-Kisan 8-வது தவணை - உங்களுக்கு வந்ததா? இல்லையா? உறுதிசெய்துகொள்ள எளிய வழி!

English Summary: PM Kisan Project: After Holi, good news for Millions of farmers! Do you know the date on which 2000 rupees will comes to the Account?
Published on: 07 March 2022, 11:00 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now