Farm Info

Friday, 21 October 2022 10:03 PM , by: Elavarse Sivakumar

பிஎம் கிசான் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் ஆதாருடன் மொபைல் எண்ணை இணைக்க அஞ்சல்துறை உதவுகிறது. எனவே 2000 ரூபாய் தவணைத்தொகையைப் பெற விவசாயிகள் தபால் அலுவலகத்திற்கு போனாலேபோதும்.

பிஎம் கிசான் திட்டம்

நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆண்டு தோறும் ரூ.6000 நிதியுதவி வழங்கும் 'பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி' என்ற திட்டம் 2018ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் 3 தவணையாக (ரூ.2000 வீதம்) இந்த நிதி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.

இ-கேஒய்சி

மத்திய அரசின் இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெறும் விவசாயிகள் பிஎம் கிசான் இணையதளத்தில் அல்லது பிஎம் கிசான் செயலியில் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP அங்கீகாரத்தை பயன்படுத்தி இ-கேஒய்சி சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.50 கட்டணம்

இதற்கு விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்கள் அல்லது தபால்காரரை அணுகி, ஆதாருடன் மொபைல் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். இந்த சேவையை பெற அஞ்சல் துறை ரூ.50 கட்டணம் வசூலிக்கிறது.

ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைத்த பிறகு, விவசாயிகள் பிஎம் கிசான் இணையதளத்தில் அல்லது பிஎம் கிசான் செயலியில் OTP அங்கீகாரத்தை பயன்படுத்தி இ-கேஒய்சி சமர்ப்பிக்கலாம்.

பிஎம் கிசான் பயனாளிகள் இ-கேஒய்சியை சமர்ப்பிக்க ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்க/புதுப்பிக்க அஞ்சல் துறையின்கீழ் செயல்படும் ஐபிபி(இந்திய அஞ்சல் வங்கி)யின் சேவையை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சென்னை நகர மண்டலம், ஆதாருடன் மொபைல் எண்ணை இணைக்கும் சேவையை சுமார் 15,000க்கும் மேற்பட்ட பிஎம் கிசான் பயனாளிகளுக்கு 2022 ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கி வருவதாக சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் க.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

அரசு ஊழியர்களுக்கு 10% போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு!

வட்டியை உயர்த்திய வங்கி- வாடிக்கையாளர்களுக்கு அதிக லாபம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)