Farm Info

Tuesday, 13 September 2022 08:29 PM , by: Elavarse Sivakumar

பிஎம் கிசான் திட்டத்தில் இன்னும் ஓரிரு தினங்களில், பயனாளிகளுக்கு அடுத்த கட்ட தொகை பட்டுவாடா செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன்படி,2 லட்சம் கோடி ரூபாய் விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை குறிப்பாக, வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்திருப்பவர்களுக்கு மட்டுமே செலுத்தப்படும் எனத் தெரிகிறது.

ரூ.6,000

பொருளதார ரீதியில் நலிவடைந்த விவசாயிகளுக்கு உதவும் வகையில், ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் பிரதமரின் கிசான் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம், 3 தவணைகளாக வழங்கப்படுகிறது. இந்தத் தொகை அவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

செப்.15க்குள்

ஏற்கனவே 11 தவணைகள் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு விட்டன. பிரதமரின் கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு 12ஆவது தவணையை இன்னும் ஓரிரு தினங்களில், அதாவது, செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் நடைபெற சாத்தியக் கூறுகள் உள்ளன. இதனைப் பெற சுமார் 11 கோடி விவசாயிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மத்திய அரசு தகவல்

இந்த 12வது தவணை குறித்து, கடந்த வாரம், குஜராத் விவசாயிகளுடன் பிரதமர் நரேந்திர மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது, 2 லட்சம் கோடி ரூபாய் விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் இணைப்பு கட்டாயம்

இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.2 ஆயிரம் வங்கிக் கணக்கில் ஆதார் எண் சமர்பித்து பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு மட்டும்தான் வழங்கப்பட உள்ளது.
இதன்படி, ஆதார் எண் சமர்பிக்கப்பட்ட வங்கிக் கணக்கில் மட்டும் பணம் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது. இது எதிர்க்கட்சிகளால் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

புகார் அளிக்க

எனவே விவசாயிகள் கூடுதல் கவனம் செலுத்தி, தங்கள் வங்கிக்கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டுவிட்டதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
அதேநேரத்தில், பிரதமர் கிசான் யோஜனா திட்டம் குறித்து அறிந்து கொள்ள கட்டணமில்லா 155261 / 011-24300606 இந்தத் தொலைப்பேசி எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் படிக்க...

4 வயது குழந்தைகள் வேலைக்குத் தேவை - வித்தியாசமான விளம்பரம்!

பிள்ளையாருக்கு ரூ.316 கோடிக்கு காப்பீடு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)