நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 30 April, 2023 9:00 AM IST
PM Kisan For All Farmers

விவசாயிகளின் நலனுக்காக பல மாநிலங்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்நிலையில், விவசாயிகளை நிதி ரீதியாக மேலும் வலுப்படுத்தும் வகையில், பிஎம்-கிசான் உள்ளிட்ட அனைத்து மத்திய திட்டங்களையும் முழுமையாக செயல்படுத்துமாறு யூனியன் பிரதேசங்களை (UTs) மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

விவசாய அமைச்சர் வேண்டுகோள்

அனைத்து நலத் திட்டங்களையும் விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்று கூறி அதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நரேந்திர சிங் தோமர் தலைமையில் தேசிய தலைநகர் டெல்லியில், விவசாயத் துறையின் விரிவான வளர்ச்சிக்காக யூனியன் பிரதேசங்களுடன் ஒரு கூட்டம் நடைபெற்றது. நாட்டின் அனைத்து துறை வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் மூலம் பிரதமர் மோடி முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக அந்தக் கூட்டத்தில் தோமர் கூறினார்.

அனைத்து விவசாயிகளுக்கும்

யூனியன் பிரதேசங்களிலும் அரசின் இந்த திட்டங்கள் 100 சதவீதம் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றார். அங்குள்ள அனைத்து விவசாயிகளும் நலத்திட்ட பலன்களைப் பெற வேண்டும். கிசான் கிரெடிட் கார்டு (கேசிசி) மற்றும் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி உள்ளிட்ட இதர திட்டங்களின் பயனை தகுதியுடைய விவசாயிகள், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் மீனவர்கள் அனைவரும் பெற வேண்டும்.
மற்ற மாநிலங்களுக்கு இணையாக இந்தப் பகுதிகளும் வளர்ச்சிப் பாதையில் முன்னேற வேண்டும். யூனியன் பிரதேசங்களின் சிறு விவசாயிகளின் வாழ்க்கை முறையிலும் மாற்றம் வர வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என அமைச்சர் கூறினார்.

பிஎம் கிசான் திட்டம் (PM Kisan)

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் இந்த விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள நலிந்த விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு மூன்று முறை தலா ரூ. 2,000 என ஆண்டுக்கு ரூ. 6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது.

மேலும் படிக்க

ரேஷன் கடைகளில் இனி புதிய வசதி: ஆன்லைன் பணப் பரிவர்த்தனை முறை அமல்!

மீண்டும் உயரந்த முட்டை விலை: அதிருப்தியில் பொதுமக்கள்!

English Summary: PM Kisan scheme for all farmers: Union agriculture minister appeals!
Published on: 30 April 2023, 09:00 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now