சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 3 December, 2022 12:14 PM IST
PM Kisan

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2,000 வீதம் என மொத்தம் மூன்று தவணையாக ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்படும். விவசாயிகள் வருவாய் ஆதரவு திட்டத்தின் கீழ், 12-வது தவணை நிதியை பிரதமர் அக்டோபர் 17 அன்று விடுவித்தார்.

பிஎம் கிசான் (PM Kisan)

விவசாய பயனாளி குடும்பங்களுக்கு சுமார் ரூ.16,000 கோடி அளவிலான தொகை அவர்களது வங்கிக்கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த தொகை விவசாயக் குடும்பங்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், விவசாய பயனாளிகள் 13-வது தவனை பெற eKYC செயல்முறையை செய்து முடிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. எனவே விவசாயிகள் விரைவாக eKYC செயல்முறையை முடிக்க வேண்டும். eKYC செயல்முறையை மேற்கொள்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

eKYC இணைப்பது எப்படி.?

முதலில், விவசாயிகள் PM-Kisan இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pmkisan.gov.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும். இப்போது முகப்புப் பக்கத்தில் உள்ள 'e-KYC' விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து ஒரு புதிய பக்கம் திறக்கும், அதில் பயனாளி விவசாயியின் ஆதார் எண், கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு தேடலை கிளிக் செய்ய வேண்டும்.

பின்னர் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடுமாறு கேட்கப்படும் இடத்தில், பொபைல் எண்ணை உள்ளிட்டவும். அதை உள்ளிட்ட பிறகு 'Get OTP' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இப்போது, OTP ஐ உள்ளிட வேண்டும். அதன் பின்னர் PM-Kisan e-KYC வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டு விடும். பயோமெட்ரிக் முறையில் e-KYC செய்ய ரூ.15 கட்டணம் செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க

வங்கி கணக்கில் ரூ.1,000 பொங்கல் பரிசு: தமிழக அரசு அறிவிப்பு!

யூரியா வாங்க ரூ.2700 மானியம்: விவசாயிகளுக்கு உதவும் மத்திய அரசு!

English Summary: PM Kisan: Update this to continue earning Rs.6,000!
Published on: 03 December 2022, 12:14 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now