Farm Info

Wednesday, 28 December 2022 06:55 AM , by: R. Balakrishnan

PM kisan 2000 rs

பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டம் 2019ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா 6000 ரூபாய் நிதி உதவியாக வழங்கப்படுகிறது.

பிஎம் கிசான் (PM Kisan)

இந்த 6000 ரூபாய் தொகை விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் காலாண்டுக்கு 2000 ரூபாய் என மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. இதுவரை மொத்தம் 12 தவணைகள் விவசாயிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளன. கடைசியாக 12ஆவது தவணை தீபாவளிக்கு முன்பாக விவசாயிகளுக்கு செலுத்தப்பட்டது.

இந்நிலையில், அடுத்து பிரதமர் கிசான் திட்டத்தின் 13ஆவது தவணை தொகைக்காக நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் காத்திருக்கின்றனர். இந்த சூழலில், வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 13ஆவது தவணை 2000 ரூபாய் விவசாயிகளுக்கு செலுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், இதுகுறித்து அரசு இன்னும் அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிடவில்லை. பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகை 100% மத்திய அரசால் வழங்கப்படுகிறது. குறு, சிறு விவசாயிகள் அனைவருக்கும் இத்திட்டத்தின் கீழ் பணம் கிடைக்கிறது.

மேலும் படிக்க

பொங்கல் பரிசு ரூ.1000: நாளை முதல் வீடு வீடாக டோக்கன் விநியோகம்!

சரிந்த காய்கறிகள் விலை: கவலையில் வியாபாரிகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)