நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 12 November, 2020 8:55 AM IST

இராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டுக்கான (2020-21) பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்துக்கு (PMFBY) வரும் 30ம் தேதிக்குள் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு 2020-21ம் ஆண்டுக்கு திருத்தியமைக்கப்பட்ட பயிர் காப்பீட்டுத் திட்டத்தில், விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் மகசூல் இழப்புகளுக்கு உரிய நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நெல் சம்பா பயிருக்கு ஏக்கருக்கு ரூ.252.06 பிரீமியம் செலுத்த வேண்டும்.காப்பீட்டுத் தொகை ஏக்கருக்கு ரூ.16,804.04 ஆக உள்ளது.பிரீமியம் செலுத்த வரும் 30ம் தேதி கடைசி நாளாகும்.

தேவைப்படும் ஆவணங்கள்

அடங்கல்
விண்ணப்ப படிவம்,
உறுதிமொழி படிவம்,
ஆதார் அட்டை நகல்
வங்கி சேமிப்பு கணக்கு விபரம்

இவற்றுடன் அந்தந்த பகுதி தொடக்க வேளாண்மை நிர்ணயிக்கப்பட்ட பொது கூட்டுறவு சேவை கடன் சங்கங்கள் மையங்கள் மற்றும் விவசாயிகளின் வங்கிக்கணக்கு உள்ள பொது உடைமை வங்கிகளைத் தொடர்பு கொண்டு பிரீமியம் செலுத்தி பயிர் காப்பீடுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி உரிய விளக்கம் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

உரங்களை வாங்குமாறுக் கட்டாயப்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை!

விவசாயத்தை வாழ்க்கையாகப் பார்த்தால் ஏமாற்றமே இல்லை!!

TNAU விஞ்ஞானி கே.எஸ். சுப்ரமணியத்திற்கு தேசிய விருது!

English Summary: PMFBY : Deadline to register for crop insurance is Nov. 30!
Published on: 12 November 2020, 08:55 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now