மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 31 August, 2020 9:17 AM IST
Credit:Amazon.in

சொட்டு நீர் பாசனம் அமைப்பதற்காக பள்ளம் தோண்டுவதற்கு ரூ.6ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுவதால், இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு வேளாண் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

பிரதமரின் நுண்ணீர்ப் பாசனத் திட்டம் (Prime Minister Krishi Sinchayee Yojana PMKSY)மூலம் இந்த மானியம் வழங்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சதீஷ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரித்திருப்பதாவது:

  • வெள்ளிமலை ஒன்றியத்தில் மரவள்ளி, மஞ்சள், தக்காளி, வெங்காயம் போன்ற தோட்டக்கலைப் பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.இப்பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் அரசு வழங்குகிறது.

  • இதில், விவசாயிகளுக்கு கூடுதலாக குழாய்களை அமைக்க பள்ளம் எடுப்பதற்கு அதிகளவில் செலவு செய்யும் நிலை ஏற்படுகிறது.

  • இதனையொட்டி குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் பள்ளம் எடுப்பதற்கு ஹெக்டர் ஒன்றுக்கு ரூ.3,000 வீதம் அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 2 ஹெக்டர் அளவிற்கு ரூ.6,000 மானியம் வழங்கப்படுகிறது.

  • எனவே, சொட்டுநீர் பாசனம் அமைக்க விருப்பம் உள்ள விவசாயிகள் பதிவின் போது தங்கள் வங்கிக் கணக்கு விபரங்களுடன் பதிவு செய்ய வேண்டும்.

  • தோட்டக்கலை பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

தென்னை சாகுபடியில் கூடுதல் வருமானம் வேண்டுமா? ஊடுபயிராகத் திப்பிலியைப் பயிரிடுங்கள்!

பார்த்தீனியம் செடியில் இருந்து பலவித உரங்கள்- தயாரிப்பது எப்படி?

English Summary: PMKSY: Subsidy up to Rs.6000 for Drip irrigation
Published on: 31 August 2020, 09:16 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now