மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 25 September, 2021 12:06 PM IST
Prime Minister Kisan Yojana: Farmers can get an annual income of Rs 42,000!

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற, மத்திய, மாநில அரசுகள் பல திட்டங்களை இயக்கி வருகின்றன. விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள ஒரு திட்டத்தை பற்றி பார்க்கலாம்.

விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ. 42000.

எப்படி என்று பார்க்கலாம்.

ஆண்டுதோறும் ரூ. 42000 பெற விவசாயிகள் இரண்டு முக்கிய அரசு திட்டங்களுக்கு அதாவது பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா மற்றும் பிரதமர் மந்தன் யோஜனா ஆகியவற்றில் பதிவு செய்ய வேண்டும். பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் பயனை ஏற்கெனவே பெறும் விவசாயிகள், பிரதமர் மந்தன் யோஜனா திட்டத்திற்கு தனி ஆவணங்களை வழங்க வேண்டியதில்லை.

இப்போது நாம் இதனை குறித்து விரிவாக காணலாம் - பிரதமர் கிசான் யோஜனாவின் கீழ், அரசாங்கம் ரூ. 6,000 நேரடியாக மூன்று சம தவணைகளில் விவசாயிகளின் கணக்கில் அனுப்புகிறது. இப்போது இரண்டாவது திட்டமான PM கிசான் மந்தன் யோஜனாவின் கீழ், 60 வயதிற்குப் பிறகு விவசாயிக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 3,000 ஓய்வூதியம் (ஆண்டுக்கு ரூ. 36000) அரசு வழங்குகிறது. அடிப்படையில், இது விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டம்.

பிரதமர் கிசான் மந்தன் தகுதி

குறைந்தபட்சம் 18 ஆண்டுகள்

2 ஹெக்டேர் வரை சாகுபடி நிலம் உள்ளது

எவ்வளவு பங்களிப்பு தேவை?

விவசாயிகள் தங்கள் பதிவு செய்யும் பொது இருக்கும் வயதைப் பொறுத்து மாதந்தோறும் ரூ. 55 முதல் ரூ. 200 வரை பங்களிப்பு செய்ய வேண்டும்.

தேவையான ஆவணங்கள் (Documents Required)

  • ஆதார் அட்டை (Aadhaar Card)
  • வங்கி பாஸ்புக் மற்றும் கணக்கு விவரங்கள் (Bank Passbook and Account Details)
  • பிறப்பு சான்றிதழ் (Birth Certificate)
  • முகவரி சான்று (Address Proof)

PM மந்தன் பதிவு செயல்முறை

ஒரு விவசாயி ஆன்லைனில் அல்லது பல்வேறு மாநிலங்களில் உள்ள பொது சேவை மையங்கள் (CSC) மூலம் சுய பதிவு செய்யலாம். அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் சேர்க்கை செயல்முறை இலவசம். ஆனால், ரூ .30/- அரசாங்கத்தால் ஏற்கப்படும் CSC இல் பதிவு செயல்முறை கட்டணமாக வசூலிக்கப்படும். பதிவு செயல்முறை முடிந்ததும், ஒவ்வொரு மாதமும் பற்றுக்கான விவசாயியின் ஒப்புதலை அறிவித்து முறையாக கையொப்பமிடப்பட்ட பயனாளியின் வங்கியால் ஒரு ஆட்டோ-டெபிட் ஆணை படிவம் உருவாக்கப்படும்.

கிடைக்கும் பலன்கள்

பிரதம மந்திரி கிசான் திட்டத்திற்கு நீங்கள் ஏற்கனவே பதிவு செய்திருந்தால், பிஎம் மந்தன் யோஜனா திட்டத்திற்கு நீங்கள் எந்த தனி ஆவணத்தையும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை.

மேலும் படிக்க...

PM KISAN: கோடி விவசாயிகளின் சிக்கியுள்ள 2000 ரூபாய் தவணை! கரணம் என்ன?

English Summary: Prime Minister Kisan Yojana: Farmers can get an annual income of Rs 42,000!
Published on: 25 September 2021, 12:06 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now