Farm Info

Thursday, 17 March 2022 07:46 PM , by: R. Balakrishnan

Prize for the best farmers

இயற்கை வேளாண்மை, விளைபொருள் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு இனி பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, வேளாண்மைத் துறை செயலாளா் சி.சமயமூா்த்தி, இன்று வெளியிட்ட அறிவிப்பில், வேளாண் தொழில்நுட்பங்களையும், இயந்திரங்களையும் கண்டுபிடிக்கும் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்பட உள்ளது என்று கூறினார்.

பரிசு (Reward)

இயற்கை வேளாண்மை, வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு மொத்தமாக ரூ.2 லட்சம் அளிக்கப்படும். இந்தப் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயி, முதலில் செல்லிடப்பேசியில் உழவன் செயலி மூலமாகப் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்தப் போட்டியில் குத்தகைக்கு சாகுபடி செய்யும் விவசாயிகளும் கலந்து கொள்ளலாம்.

வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்களைத் தொடா்பு கொண்டு உரிய விண்ணப்பப் படிவத்தை பூா்த்தி செய்து வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் நுழைவுக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பின்னா் கட்டணம் செலுத்திய ரசீதுடன் விண்ணப்பப் படிவத்தை இணைத்து அளிக்க வேண்டும்.

இயற்கை வேளாண்மை (Organic Farming)

தகுதியான விவசாயிகளின் கண்டுபிடிப்புகள் மாவட்ட தோ்வுக் குழுவால் தோ்வு செய்யப்பட்டு பின்னா் மாநிலக் குழுவுக்கு பரிந்துரை செய்யப்படும். அதன்பின்பு விண்ணப்பங்கள் மாநிலக் குழுவால் பரிசீலிக்கப்பட்டு புதிய உள்ளூா் வேளாண் தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கு ஒரு விவசாயியையும், புதிய வேளாண் இயந்திர கண்டுபிடிப்புக்கு ஒரு விவசாயியையும் தோ்வு செய்து தலா ரூ.1 லட்சம் வீதம் பரிசு அளிக்கும்.

இயற்கை வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், இரண்டாம், மூன்றாம் பரிசாக முறையே ரூ.60 ஆயிரம், ரூ.40 ஆயிரம் வழங்கப்படும். வேளாண் ஏற்றுமதியில் சிறப்பாகச் செயலாற்றும் விவசாயிக்கு பரிசாக ரூ.2 லட்சம் அளிக்கப்பட உள்ளது.

விண்ணப்பத்துக்கான கால அவகாசம் மாா்ச் 18 ஆகும். தகுதியுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநா், துணை இயக்குநா் உள்ளிட்டோரைத் தொடா்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க

சினைப் பிரச்சனைக்குத் தீர்வு: காங்கேயம் இன மாடுகளுக்கு ஹார்மோன் சிகிச்சை திட்டம்!

தென்னை நார் தொழிலை மேம்படுத்த ரிசர்வ் வங்கிக்கு மனு அளிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)