சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 17 March, 2021 3:28 PM IST

நீங்கள் ஒரு தனி இடத்தை ஏற்பாடு செய்யாமல் வீட்டில் இருந்துக்கொண்டே ஒரு தொழிலை தொடங்க நினைத்தால், இந்த தகவங் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் வீட்டின் மேற்கூரையில் சோலார் பேனலை நிறுவி 25 ஆண்டுகள் வரை வருமானம் பெற முடியும்.

மத்திய அரசின் எரிசக்தி அமைச்சகம் வீட்டின் மீது அமைக்கப்படும் சோலார் பேனல் ஆலைகளுக்கு 30 சதவீத மானியத்தை வழங்குகிறது. மானியமின்றி சோலார் பேனல்களை நிறுவ சுமார் 1 லட்சம் ரூபாய் செலவாகும். இதன் மூலம் ஒரு பெரிய மின்சார தேவையை நீங்கள் பூர்த்தி செய்ய முடியும். உண்மையில், நீங்கள் எங்கு வேண்டுமானாலும் சோலார் பேனலை (Solar Panel) நிறுவலாம். இதன் மூலம் நல்ல நீண்டகால வருமனாத்தை நாம் பெற முடியும்.

சோலார் பேனல் அமைக்க ஆகும் செலவு?

சோலார் பேனலின் விலை சுமார் ஒரு லட்சம் ரூபாய் ஆகும். இதன் செலவு ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப வேறுபட்டது. ஆனால் அரசாங்கத்தின் மானியத்திற்குப் பிறகு, ஒரு கிலோவாட் மின் தயாரிப்புக்கான சோலார் ஆலை 60 முதல் 70 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்படும். சில மாநிலங்கள் இதற்கு கூடுதல் மானியத்தை வழங்குகின்றன

வீட்டில் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைப்பதாக இருந்தால் இதற்காக நீங்கள் எந்த வங்கியிலும் வீட்டுக் கடனை எடுக்கலாம். அனைத்து வங்கிகளுக்கும் வீட்டுக் கடன்களை வழங்குமாறு நிதி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த திட்டத்தின் நன்மைகள் என்ன?

  • வீட்டில் நிறுவப்படும் சோலார் பேனல்களை 25 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும்.

  • வீட்டின் மேற்கூரையில் இந்த பேனலை எளிதாக நிறுவலாம். இதன் மூலம் இலவச மின்சாரத்தை நீங்கள் பெற முடியும்.

     

  • மீதமுள்ள மின்சாரத்தை கிரிட் மூலம் அரசாங்கத்துக்கோ அல்லது நிறுவனத்துக்கோ விற்க முடியும்.

  • உங்கள் வீட்டின் கூரையில் இரண்டு கிலோவாட் சோலார் பேனலை நிறுவினால், பகலில் 10 மணி நேரம் சூரிய ஒளி ஏற்பட்டால் சுமார் 10 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். மாதத்தை நாம் கணக்கிட்டால், இரண்டு கிலோவாட் சோலார் பேனல் சுமார் 300 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யும்.

சோலார் பேனல்களை வாங்குவது எப்படி?

  • சோலார் பேனல்களை வாங்க மாநில அரசின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு ஆணையத்தை தொடர்பு கொள்ளலாம்.

  • மாநிலங்களின் முக்கிய நகரங்களில் அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

  • ஒவ்வொரு நகரத்திலும் உள்ள தனியார் விற்பனையாளர்களிடமும் சோலார் பேனல்கள் கிடைக்கின்றன.

  • மானியத்திற்கான படிவம் அரசு அலுவலகத்திலிருந்து கிடைக்கும்.

 

சோலார் பேனல்கள் பராமரிப்பு

சோலார் பேனலைப் பராமரிப்பதற்கு நீங்கள் அதிக செலவு செய்யவேண்டியது இல்லை. ஆனால் அதன் பேட்டரி 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்பட வேண்டும். இதன் விலை சுமார் 20 ஆயிரம் ரூபாய். இந்த சோலார் பேனலை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எளிதாக நகர்த்த முடியும்.

500 வாட்ஸ் வரை சோலார் பேனல்கள் கிடைக்கும்

சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முயற்சி அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. தேவைக்கேற்ப, 500 வாட் வரை திறன் கொண்ட சூரிய சக்தி பேனல்களை நிறுவ முடியும். இதன் கீழ், ஒவ்வொரு ஐநூறு வாட் திறனை நிறுவ 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.

மேலும் படிக்க...

பணம் செலுத்த இனி எந்த Cardம் தேவையில்லை -வாட்ச் இருந்தால் போதும்!

வீட்டு நகைகள் தான் பெரிய முதலீடு : எஸ்பிஐ-யின் தங்கம் பணமாக்குதல் திட்டம்!

English Summary: Profitable Business Idea: With just Rs75000 investment .. you can get good income from home for 25 years !!
Published on: 17 March 2021, 03:28 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now