மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 February, 2021 12:51 PM IST

நெல் விதைகளை தர ஆய்வு செய்து, போதிய ஈரப்பதத்துடனும் சேமித்து வைத்தால் விளைச்சலின் போது அதிக மகசூல் கிடைக்கும் என குமரி மாவட்ட வேளாண் அலுவலர் மோகன் தெரிவித்துள்ளார். நெல் விதைகளை தர ஆய்வு செய்ய ரூ.30 மட்டுமே செலவாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நெல் விதை தரத்தில் கவனம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. அவை அனைத்தும் அறுவடைக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில், விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ள வேளாண் அலுவலர் மோகன், நாம் தரமான விதைகளை அறுவடை செய்து, நன்கு சுத்தம் செய்து அதன் தரத்தினை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். நெல் விதை குவியல்களை நன்கு காயவைத்து, நெல் விதைக்கு தேவையான 13 சதவீதம் ஈரப்பதத்துடன் காற்றோட்டமான இடத்தில் சேமித்து வைக்க வேண்டும் என்கிறார்.

 

ரூ.30ல் நெல் விதை தர ஆய்வு

இவ்வாறு சேமிக்கப்பட்ட விதையின் ஈரப்பதம், முளைப்புத்திறன் மற்றும் புறத்தூய்மையை தெரிந்துகொள்ள 50 கிராம் நெல் விதைகளை தங்கள் முகவரியுடன் நாகர்கோவில் புன்னைநகர் திருபாப்பு லேஅவுட் தெருவில் அமைந்துள்ள கன்னியாகுமரி விதைப்பரிசோதனை நிலையத்தில் கொடுத்து விதைகளின் தரத்தை அறிந்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு கட்டணமாக ரூ.30 செலுத்த வேண்டும். நெல் விதையின் ஈரப்பதத்தை அறிந்துகொள்ள நெல் விதையை 50 கிராம் அளவிற்கு தனியாக ஒரு பாலித்தீன் கவரில் வைத்து அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மகசூல் அதிகரிக்கும்

நாம் இவ்வாறு ஈரப்பதத்தை அறிந்துகொள்வதால் பூச்சி நோய் தாக்குதல் எதுவுமின்றி தரமான விதையினை பெற ஏதுவாக இருக்கும். அவைகளை விளைச்சலின் போது அதிக மகசூல் தரும் என்றும் வேளாண்மை அலுவலர் மோகன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

சொட்டுநீர் பாசன முறையில் கரும்பை பயிரிட்டு கூடுதல் மானியம் பெற்றிடுங்கள்! - விவசாயிகளுக்கு அழைப்பு!

மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா நெல் ஆராய்ச்சிகளுக்கு ஒப்பந்தம்! வேளாண் பல்கலை துணைவேந்தர் தகவல்!

மேட்டூர் உபரி நீரை சரபங்கா வறண்ட ஏரிகளுக்கு வழங்கும் திட்டம் - முதல்வர் பழனிசாமி துவக்கிவைப்பு!!

கூட்டுறவு வங்கிகளில் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் பெற்ற கடன் தள்ளுபடி - முதல்வர் அறிவிப்பு!!

English Summary: Quality paddy seeds can give higher yields says Agriculture Officer
Published on: 27 February 2021, 12:51 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now