மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 26 June, 2021 7:09 AM IST
Credit : Dailythanthi

தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதை தடுக்க வேண்டும்' என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நெல் கொள்முதல் (Purchase of paddy)

டெல்டா மாவட்டங்களில் குறுவை, தாளடி மற்றும் சம்பா சாகுபடியின் போது, அறுவடை செய்யப்படும் நெல், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.

குடோன் வசதி கிடையாது (There is no coupon facility)

கொள்முதல் நிலையங்களில் போதுமான சிமென்ட் தரைத்தள வசதியும், குடோன் வசதியும் இல்லாததால், கொள்முதல் செய்யப்படும் நெல்லை, திறந்த வெளியில் மண் தரையில் குவியலாகக் கொட்டி வைக்கின்றனர்.

தார்பாயில் மூடி (Cover with tarpaulin)

சில இடங்களில் மூட்டைகளாக அடுக்கி, தார்ப்பாய் போட்டு மூடி வைக்கின்றனர். இதனால், அவை மழையில் நனைந்து வீணாவது தொடர்கதையாக உள்ளது.


பரவலாக மழை (Widespread rain)

இந்நிலையில் திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில், இரண்டு நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. முதல் நாளில் திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

நனைந்த நெல் மூட்டைகள் (Wet paddy bundles)

இதன் காரணமாக தஞ்சாவூர் அருகே, அன்னப்பன் பேட்டை, சடையார்கோவில், பொன்னாப்பூர் உள்ளிட்ட இடங்களில், விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தன.

திருச்சி மாவட்டம் முழுதும், பல கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியில் கொட்டி வைத்திருந்த 25 டன் நெல்மணிகள் நனைந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக வேதனையில் உறைந்த விவசாயிகள் கூறுகையில்,

ரூ.4 ஆயிரம் வரை (Up to Rs.4 thousand)

மழை காரணமாக, நெல்லில் ஈரப்பதம் அதிகரிப்பதால், உலர வைத்து, துாசியை அகற்றிய பின் தான் விற்க முடியும். இதற்கு, டன்னுக்கு 4,000 ரூபாய் வரை கூடுதல் செலவு செய்ய வேண்டும்.

தொடரும் பிரச்னை (Continuing problem)

டெல்டா மாவட்ட விவசாயிகள், ஆண்டு தோறும் இந்தப் பிரச்னையை சந்தித்து வருகிறோம். எனவே, தமிழக அரசு இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கண்ணீருடன் கூறினர்.

லாரிகள் ஓடவில்லை (The trucks were not running)

கொள்முதல் நிலைய பணியாளர்கள் கூறுகையில், 'நாளொன்றுக்கு 900 மூட்டைகள் வரை கொள்முதல் செய்கிறோம். லாரிகள் அதிகம் இயக்கப்படாததால் நெல் மூட்டைகள் தேங்கி, மழை பெய்யும் போது நனைந்து விடுகின்றன, என்றனர்.

மேலும் படிக்க...

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்- கொள்முதல் பணி நிறுத்தம்!

30% கூடுதல் மகசூல் வேண்டுமா? - ஒற்றை நாற்று நடவு முறையை மேற்கொள்ளுங்கள்! - வேளாண்துறை அறிவுரை!!

English Summary: Rain-soaked paddy bundles - Will the government take action?
Published on: 25 June 2021, 08:52 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now