அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 18 October, 2023 1:24 PM IST
Rain water harvesting

தண்ணீர் பற்றாக்குறையினால் நடப்பாண்டு குறுவை சாகுபடி எந்தளவிற்கு மோசமடைந்துள்ளது என்பதை விவரிக்க வார்த்தைகள் இல்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமெடுத்துள்ளதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இனி அடுத்த சில வாரங்களில் வட கிழக்கு பருவமழையும் தொடங்க உள்ள நிலையில் பெய்யும் மழைநீரை முறையாக சேமித்து விவசாய பணிகளில் ஈடுப்படுத்தினால் பயிர் வாடுவதை தடுக்க இயலும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

இதனிடையே வேளாண் ஆலோசகர் அக்ரி சந்திர சேகரன், மழைநீரை அறுவடை செய்து பராமரிக்கும் கட்டமைப்புகள் குறித்த தகவல்களை கிரிஷி ஜாக்ரானுடன் பகிர்ந்துள்ளார். அவர் குறிப்பிட்ட விவரங்கள் பின்வருமாறு-

விண்ணிலிருந்து மழைத்துளிகளை ஓரு துளியும் வீணாகாமல் சேகரிக்க வேண்டும் என்பதற்காகவே "அறுவடை" என்ற சொல்லை பயன்படுத்துகிறேன். மழை பெய்யும் போது அந்தந்த இடங்களில் சேகரிப்பதன் மூலமாக நில வளமும் மண் வளமும் காக்கப்படுகிறது. மழைநீர் சேகரிக்க பயன்படும் கட்டமைப்புகளை இனி பார்க்கலாம்.

நீர் சேகரிப்பு குழி:

இவ்வகையில் மழைநீர் அறுவடை செய்வது மிக எளிது. குழியின் நீளம் அகலம் இவ்வளவு தான் இருக்க வேண்டும் என்றில்லை. சாதாரணமாக நெடுஞ்சாலைகளின் சாலைக் கரைகளை பலப்படுத்த உதவும் குழிகள், பள்ளங்கள் போல அமைக்கலாம். இதனுடைய நோக்கமே பெய்கின்ற மழை அதே இடத்துல சேகரிக்கப்பட்டு பூமிக்குள் செல்ல ஏதுவாக வழிவகை செய்ய வேண்டும் என்பது தான். சிறு/ குறு விவசாயிகள் தங்கள் நிலங்களில் உரக்குழிகள் இருப்பது போல அமைக்கலாம்.

சமமட்ட பள்ளம்:

வேளாண்பொறியியல் துறையினரால் மண் அரிப்பினை தடுப்பதற்கு அமைக்கப்படும் பள்ளங்களில் மழைநீர் சேகரிக்கப்படுவதால் , ஈரப்பதம் பல நாட்களாக காக்கப்படுகிறது.

பண்னணக் குட்டை:

இது தனிநபர்களின் விவசாய நிலங்களில் அரசின் மானிய உதவியுடன் அமைக்கப்படுகிறது. இதில் சேகரமாகும் நீர் பயிர்களுக்கும், மரக்கன்றுகளுக்கு உயிர் காக்கும் தண்ணீரை வழங்க முடியும். திறமையும் ஆர்வமுள்ள விவசாயிகள் பண்னண குட்டைகள் பயன்படுத்தி மீன் வளர்ப்பு மேற்கொண்டு அதிக வருவாய் பெறலாம்.

அவரவர் நிலங்களில் இயற்கையாகவே தாழ்வான பகுதியை தேர்ந்தெடுத்து பண்னண குட்டைகளை அமைக்கலாம்.

தடுப்பணைகள்:

ஓடைகளின் குறுக்கே கட்டப்படும் கட்டுமானமே தடுப்பனைணகள் ஆகும். இதனுடைய நோக்கம் ஓடிவரும் நீரின் வேகத்தை கட்டுப்படுத்தி மண்அரிமானத்தை ( SOIL EROSION) தடுக்கிறது. இங்கு நீர் நிறுத்தி வைப்பதால், நிலத்தடி நீர்வளம் பெருக்கப்படுகிறது. பொதுவாக பெய்கின்ற மழைநீர் 20 முதல் 30% ஓட்டமாக சென்று வீணாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலே குறிப்பிட்ட மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை குறைந்த செலவில் செய்து குறைந்தப்பட்சமாக 10% மழைநீரை சேகரித்தால் கூட நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயருவதுடன் மண்அரிப்பும் தடுக்கப்படுகிறது. நிலத்தினுள் நீர் பிடிப்புத்திறனும் மண்ணிக்கு எற்படுவதால் மானாவாரி சாகுபடியில் கூடுதலான மகசூல் எற்பட வாய்ப்புள்ளது.

எனவே விவசாயிகள் அரிதாக பெய்கின்ற மழைநீரை சேமிக்க ஆர்வமாக  இருக்க வேண்டும் என வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திர சேகரன் தெரிவித்துள்ளார். மேற்குறிப்பிட்ட தகவல் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள்/ விளக்கங்கள் தேவைப்படுமாயின் அணுகவும்.

அக்ரி சு.சந்திர சேகரன்-9443570289

இதையும் காண்க:

TAHDCO: விவசாய நிலம் வாங்க 50 % மானியத்துடன் கூடிய கடனுதவி

இந்தியாவில் நம்பகமான டாப் 10 மீன் வளர்ப்பு பிசினஸ் ஐடியா!

English Summary: rain water harvesting structures for agricultural work
Published on: 18 October 2023, 12:55 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now