Farm Info

Tuesday, 07 September 2021 12:34 PM , by: T. Vigneshwaran

Red lady finger

ஏஎன்ஐ அறிக்கையின்படி, மத்தியப் பிரதேசத்தின் போபால் மாவட்டத்தில் உள்ள கஜூரி காலன் பகுதியைச் சேர்ந்த விவசாயி மிஸ்ரிலால் ராஜ்புத் தனது தோட்டத்தில் சிவப்பு ஓக்ராவை (வெண்டைக்காய்) வளர்த்து வருகிறார்.

ஞாயிற்றுக்கிழமை செய்தி நிறுவனத்துடன் பேசுகையில், அவர் தனது வெண்டைக்காயின் மாறுபாட்டின் நன்மைகளை தெரிவித்தார்.

அவர் வளர்க்கும் வெண்டைக்காய் அதன் வழக்கமான பச்சை நிறத்திற்கு பதிலாக சிவப்பு நிறத்தில் உள்ளது. இது பச்சை வெண்டைக்காய் விட அதிக நன்மை பயக்கும் மற்றும் சத்தானது. இதயம் மற்றும் இரத்த அழுத்தம், நீரிழிவு, அதிக கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என்று அவர் கூறினார். .

சாகுபடி செயல்பாட்டில், "நான் வாரணாசியில் உள்ள ஒரு வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து 1 கிலோ விதைகளை வாங்கினேன். ஜூலை முதல் வாரத்தில் அவற்றை விதைத்தேன். சுமார் 40 நாட்களில், அது வளரத் தொடங்கியது என்று தெரிவித்தார்.

ராஜ்புத்தின்படி, சிவப்பு வெண்டைக்காய் சாகுபடியின் போது தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படவில்லை.

ஒரு ஏக்கர் நிலத்தில் குறைந்தபட்சம் 40-50 குவிண்டால் மற்றும் அதிகபட்சம் 70-80 குவிண்டால் வளர்க்கலாம் என்று ராஜ்புத் தெரிவித்தார்.

தனது தயாரிப்பின் விற்பனை மற்றும் விலை பற்றி பேசுகையில், "இந்த சிவப்பு வெண்டைக்காய் சாதாரண வெண்டைக்காயை  விட 5-7 மடங்கு அதிக விலை கொண்டது. இது சில மால்களில் 250 கிராம்/500 கிராமுக்கு ₹ 75-80 முதல் 300-400 என்ற விலையில் விற்கப்படுகிறது.

மேலும் படிக்க:

வெண்டைக்காய் பயிர்- கோடைகாலப் பயிரின் முழு விவரம்

வெண்டைக்காயின் 10 நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)