Farm Info

Saturday, 19 December 2020 07:42 AM , by: Elavarse Sivakumar

வாரணாசியிலிருந்து வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாருக்கு முதன்முறையாக அரசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரிசி விளைச்சல் அதிகளவு உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டும், அரிசி ஏற்றுமதிக்கு வாரணாசியில் அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாலும், அதற்கான பணிகளை , வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணையமான அபெடா (Agricultural and Processed Food Products Export Development Authority (APEDA) மேற்கொண்டது.

முன்னணி ஏற்றுமதியாளர்களுடன் இணைந்து அரிசியை ஏற்றுமதி செய்வதற்கான சரக்கு தளத்தை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த முயற்சியின் பயனாக நேற்று வாரணாசியிலிருந்து முதன் முறையாக 520 மெட்ரிக் டன் அரிசி கத்தாருக்குக் அனுப்பிவைக்கப்பட்டது.

அரிசி ஏற்றிச்சென்ற வாகனத்தை அபெடா அமைப்பின் தலைவர் எம்.அங்கமுத்து வாரணாசி மண்டல ஆணையர் தீபக் அக்ரவால் ஆகியோர் கொடியசைத்துத் துவக்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய எம். அங்கமுத்து, வாரணாசியிலிருந்து அரிசி ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான திட்ட அறிக்கையை அபெடா தயாரிக்கும் என்று குறிப்பிட்டார்.

மேலும் படிக்க...

குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டித் தரும் சிறு தானியங்கள்!

பருவநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய விவசாயத்தை உருவாக்க வேண்டும்!

விவசாயிகள் போராட்டத்தால் ரூ.5000 கோடி இழப்பு- CAIT தகவல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)