Farm Info

Tuesday, 12 October 2021 08:31 AM , by: Elavarse Sivakumar

தமிழகத்தில் சம்பா பயிரால் பாதிக்கப்பட்ட, 8 லட்சம் விவசாயிகளுக்கு, 1,600 கோடி ரூபாய் விரைவில் இழப்பீடாக வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பா சாகுபடி (Samba cultivation)

தமிழகத்தில் கடந்த 2020 அக்டோபர் முதல் நடப்பாண்டு ஜனவரி மாதம் வரை, சம்பா பருவ நெல் சாகுபடி மட்டுமின்றி, பல்வேறு பயிர் சாகுபடியும் நடந்தது.
கொரோனா ஊரடங்கு காலத்திலும், விவசாயிகள் ஆர்வமுடன் சாகுபடி செய்தனர்.

சோதனை மேல் சோதனை (Test over test)

ஆனால் கொரோனாவுக்குப் போட்டியாக டிசம்பர் மாதம் வீசிய, 'நிவர்' மற்றும், புரெவி புயல்களால், 15 மாவட்டங்களில் பயிர் சேதம் ஏற்பட்டது.

பருவம் தவறிய மழை

அதுமட்டுமா? வேதனை, இதையடுத்து, ஜனவரியில் அறுவடை நேரத்தில், பருவம் தவறிப் பெய்த மழையாலும், பல மாவட்டங்களில் பயிர் சேதம் ஏற்பட்டது.

மொத்தமாக, 25 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டன. பயிர் பாதித்த விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணமாக, 1,715 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு, இழப்பீடு பெற்று தரும் பணிகளை, வேளாண்துறையினர் மேற்கொண்டனர்.

ரூ.1,600 கோடி 

தற்போது, 1,600 கோடி ரூபாயை, பயிர் இழப்பீடாக வழங்கக் காப்பீட்டு நிறுவனங்கள் முன்வந்து உள்ளன. மாநிலம் முழுதும், 8 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட உள்ளது.

முதல்வர் கையால்

வழக்கமாக, பயிர் இழப்பீடு நிவாரணம், நேரடியாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் உடனுக்குடன் வரவு வைக்கப்படும். இந்தமுறை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கையால் நிவாரணம் வழங்க, வேளாண் துறையினர் முடிவெடுத்துள்ளனர்.

தேதி இன்னும் முடிவாகாததால் விவசாயிகள் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

மேலும் படிக்க...

விவசாயிகளுக்கு 5 லட்சம் மானியம்- காட்டுத்தீ போல பரவும் தகவல்!

குறுவை நெல் கொள்முதல் பணிகள்- விரைவாக முடிக்க முதலமைச்சர் உத்தரவு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)